நினைவில் நின்றவை...
சில மாதங்களுக்கு முன்பு நானும் எனது மாமாவின் பையனும் ரயிலில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தோம். பண்டிகை சமயத்தில் சென்னை சென்று துணி எடுப்பது வழக்கம். இந்த முறையும் தீபாவளிக்கு ஷாப்பிங் செய்ய தான் சென்று கொண்டிருந்தோம். அமெரிக்கா சென்று வந்த பின் அங்கே வெதர் எப்படி இருக்கும், என்ன பண்ணுவீங்க, எப்படி பயணம் செய்வீர்கள், சாப்பாடு எல்லாம் எப்படி இருக்கும் என்ற அவன் கேள்விகளுக்கு பதில் சொல்வதே எனக்கு சரியாக இருக்கும். அன்றும் ரயில் ஏறியதில் இருந்தே அவன் கேள்விகளை கேட்க ஆரம்பித்திருந்தான். திடீரென்று எனது செல்போன் அலறியது. அவன் தான் செல்போனில் பாட்டு கேட்க வேண்டும் என்று வாங்கி கையில் வைத்திருந்தான். அழைப்பு வந்ததும் என் கையில் திணித்தான். எண்ணை வைத்து யார் கால் செய்கிறார்கள் என்று என்னால் கணிக்க முடியவில்லை. போனை எடுத்து ஹலோ என்றேன். மறுமுனையில் இருந்து என் பெரியப்பாவும் அண்ணனும் பேசினார்கள். போனை வைத்த பின் நம்பரை ஸ்டோர் செய்தேன். அது வரை பக்கத்தில் இருந்த மாமா மகன் இவங்க நம்பர் வேண்டுமா, அவங்க நம்பர் வேண்டுமா என்று தொடர்ச்சியாக ஒரு பதினைந்திற்கும் மேலான போன் நம்பர்களை வரிசையாக அவனது செல்போனை பார்க்காமல் சொன்னான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதே சமயம் இதே போல் செல்போன் வராத காலத்தில் நான் மனப்பாடமாக வைத்திருந்த நம்பர்களின் எண்ணிக்கை ஐம்பதையும் தாண்டும் என்றளவு நினைவிற்கு வந்தது. சற்று நேரத்திக்கு முன் போன் செய்த பெரியப்பாவின் நம்பர் கூட எத்தனையோ முறை அம்மா போன் பேசும் போது சொல்லி இருக்கிறேன். எப்படி இவை எல்லாம் மறந்து விட்டன என்று யோசித்தபடி இருந்தேன். முதன் முதல் செல்போன் வாங்கி ஓசூரில் வைத்து தொலைத்த போது அதில் போட்டிருந்த அப்போதைய ஹட்ச் செல்போன் நம்பர் கூட என் நினைவிற்கு வரவில்லை. ஓசூரில் இருக்கும் போது அடிக்கடி நான் கூப்பிடும் இரண்டு நண்பர்களின் பழைய செல்போன் நம்பர்கள் கூட நினைவிற்கு வரவில்லை. நண்பர்களுக்கே போன் போட்டு கேட்டேன். அவர்களுக்கும் நினைவில் ஏதும் இல்லை என்றார்கள். இப்படி நாம் எதையெல்லாம் மறந்து கொண்டிருக்கோமோ தெரியவில்லை.
உங்களுக்கு உங்கள் பழைய செல்போன் நம்பர் நினைவில் இருக்கிறதா?
வேடம் கலைந்தது...
சில நாட்களாக காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்திலோ அல்லது ரயிலிலோ அலுவலகம் சென்று வந்து கொண்டிருக்கிறேன். வீட்டில் இருந்து செல்வதால் காலையில் முன் எப்போதும் இல்லாத உற்சாகத்துடனே போன திங்கள் கிழமையும் கிளம்பினேன். திங்களன்று காலை எப்போதும் ரயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அன்று தாம்பரம் வழியாக அடையாறு செல்லும் ஏழு மணி பேருந்தில் ஏறினேன். எட்டரை மணிக்கு தாம்பரத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டு பீச் செல்லும் மின்சார ரயில் சென்றவுடன் திறப்பார்கள். அன்றும் மூடப்பட்டிருந்த கேட் முன் பேருந்து நின்றது. சற்று நேரத்தில் பக்கத்தில் ஒரு தனியார் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றி செல்லும் வண்டி வந்து நின்றது. வண்டியின் முன் வரிசையில் விவாஷ் ஜெயினும், ஹரிபிரசாத்தும் அமர்ந்திருந்தார்கள். எப்படி பெயர் தெரியும் என்று கேட்கிறீர்களா? அவர்களின் அடையாள அட்டையில் தான் நானும் பார்த்து தெரிந்து கொண்டேன் [ஆறு வருஷ அனுபவம்ல!!!...ம்ம்ம்]. அவர்கள் முகத்தில் திங்கள்கிழமை பள்ளி செல்லும் சோகம் எதுவும் தெரியவில்லை. மாறாக உற்சாகம் ததும்பி வழிந்து கொண்டிருந்தது. அந்த வண்டியில் இருந்த குழந்தைகள் அனைவருமே உற்சாகத்தோடு காணப்பட்டனர். ஒருவரிடம் இருந்து உற்சாகம் மற்றவர்களுக்கு பரவியிருக்கக்கூடும். நானும் காதில் ஐபாடை மாட்டிக்கொண்டு, கேட்டாலே உற்சாகம் தரும் பாடல்களைத்தான் கேட்டுக் கொண்டிருந்தேன். விளையாடிக் கொண்டிருந்த விவாஷும், ஹரியும் ஜன்னல் பக்கம் பார்த்தவுடன் என்னைப் பார்த்து உற்சாகத்தோடு கையசைத்தார்கள். நானும் ஐபாடை காதில் இருந்து எடுக்காமல் அவர்களை பார்த்து புன்னகைத்தேன். வண்டி டிரைவர் கையெல்லாம் வெளியே நீட்டக் கூடாது என்று சத்தம் போட்டார். இருவரும் சடக்கென்று கையை உள்ளே இழுத்துக் கொண்டனர். இரண்டு நொடிகள் கூட கடந்திருக்காது. ஒரக்கண்ணில் டிரைவரை பார்த்தபடி விவாஷும், ஹரியும் மறுபடி என்னைப் பார்த்து கையசைத்தார்கள்-இப்போது இன்னும் அதிக உற்சாகத்துடன். டிரைவர் அவர்களை கண்டும் காணாதது போல் இருந்து கொண்டார். இதுவரை நான் அவர்களை பார்த்து புன்னகைத்தேனே தவிர, காதில் இருந்து ஐபாடை எடுக்கவோ, கையசைக்கவோ இல்லை. என் சீட்டில் கடைசியாக இருந்த சிறுவன் அவன் அப்பாவை நகர சொல்லி விட்டு என்னையும் தாண்டி அவர்களை நோக்கி கையசைத்தான். எனக்கு இப்போது தான் உரைத்தது-நான் உற்சாகம் என்று சொல்லிக் கொள்வது உற்சாகம் அல்ல என்று. ஐபாடை எடுத்து உள்ளே வைத்தேன். விவாஷையும், ஹரியையும் நோக்கி உற்சாகமாக நானும் கையசைத்தேன், என்னருகில் இருந்த பெயர் தெரியாத சிறுவனை மடியில் வைத்துக் கொண்டு. மனம் எங்கும் உற்சாகம் பரவிக் கொண்டிருந்தது.
உங்கள் உற்சாகம் எதில் இருக்கிறது என்று தெரியுமா?
Monday, December 28, 2009
அனுபவம் பேசுமா?
தாம்பரம் - இரவு காஞ்சிபுரம் செல்ல வழக்கமாக பிடிக்கும் எட்டு மணி ரயிலை அவசர அவசரமாய் சென்று கடைசி நிமிடத்தில் ஒரு வழியாக பிடித்தேன். இல்லையென்றால் பேருந்திலோ அல்லது ஒன்பது மணி ரயிலை பிடித்தாலோ, வீடு செல்ல பத்தரை மணிக்கு மேல் ஆகிவிடும். வழக்கம் போல் இன்றும் ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூடுவாஞ்சேரி வந்ததும் கூட்டம் கொஞ்சம் இறங்கும் . அதன் பிறகு தான் உட்கார இடம் கிடைக்கும். காஞ்சிபுரம் செல்லும் வழியில் பழையசீவரத்திலும், வாலாஜாபாத்திலும் கொஞ்சம் கூட்டம் இறங்கிடும். திருமால்பூர் வரை செல்லும் ரயிலில் காஞ்சிபுரத்தில் இறங்கியது போக, மிகவும் சிலரே செல்வார்கள்.
நெரிசலில் நெருக்கி தள்ளி ஒரு வழியாக உள்ளே சென்றேன். ஓரளவுக்கு ஏதுவாக நின்று கொண்டு பையில் வைத்திருந்த ஐபாடை எடுத்து காதில் சொருகி கொண்டேன். பெருங்களத்தூரில் கொஞ்சம் கூட்டம் இறங்கியது. புதுப்பட பாடல்களில் இருந்து இளையாரஜவிற்கு தாவினேன் - மனோவின் குரலில் 'ஒ பிரியா பிரியா' பாடியது. அது வரை பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர் "இந்த போன் கொரியன் செட்டா சார்" என்று கேட்டார். நான் காதில் இருந்து இயர் போன்களை எடுத்து விட்டு, இல்லைங்க இது ஒரிஜினல் கம்பெனி பீஸ் தான் என்றேன். அப்படியா சார், பேட்டரி எவ்ளோ நேரம் நிக்கும் என்றார். நான் குறைந்தது எட்டு மணி நேரம் நிக்கும் என்றேன். அவரிடம் இது போன் இல்லை வெறும் பாட்டு கேக்குறதுக்கு தான் என்று சொல்ல எத்தனித்த போது அவர் வண்டலூரில் இறங்கியே விட்டார்.
கூடுவாஞ்சேரியில் உட்கார இடம் கிடைத்தது. ஐபாடை எடுத்து உள்ளே வைத்து விட்டு பையில் வைத்திருந்த வண்ணநிலவனின் ரெயினீஸ் ஐயர் தெருவை படிக்க ஆரம்பித்தேன். செங்கல்பட்டில் ஐந்து நிமிடம் நின்று சிக்னல் கிடைத்த பிறகு தான் ரயில் புறப்படும். அதற்குள் பின்னாடி இருக்கும் பெட்டிக்கு சென்று விட்டால் காஞ்சிபுரத்தில் பிளாட்பாரத்தில் இறங்கி ரொம்ப தூரம் நடக்க வேண்டி இருக்காது. இறங்கி பின்னாலிருந்து மூன்றாவது பெட்டிக்கு சென்று ஜன்னலோரமாய் அமர்ந்து கொண்டேன். எனக்கு எதிரே ஐம்பதுக்கும் மேல வயசு இருக்கிற ஒருத்தர் உட்கார்ந்திருந்தார். கையில இருந்த மாலை மலரை பைக்குள்ள வெச்சிட்டு என்னை பார்த்தார். நான் மறுபடியும் ஐபாடை எடுத்து காதுக்கு கொடுத்தேன். ரயில் நிலையம் பக்கத்தில் இருக்கும் ஏரியில் இருந்து காற்று வீசி கொண்டிருந்தது. ரயிலில் எரியும் விளக்கிற்கு ஏகமாக பூச்சிகள் பறந்து வந்து கொண்டிருந்தன.
நிறைய விஷயங்களை பத்தி நினைச்சுகிட்டே பாட்டை கேட்டுகிட்டு இருந்தேன். ரயில் புறப்பட்டு கொஞ்சம் தூரம் போயிருக்கும். தொடர்ந்து சீட்ல உட்கார கஷ்டமா இருக்கேன்னு எழுந்து கதவுக்கு பக்கத்துல போய் நின்றேன். காற்று சுகமா இருந்தது. கண்ணை மூடிக்கிட்டு கம்பியை புடிச்சிக்கிட்டு நின்று கொண்டிருந்தேன். பாலூர் ஸ்டேஷன் வர இன்னும் பத்து நிமிஷம் ஆகும். கொஞ்ச நேரத்துல எனக்கு எதிரே உட்கார்ந்திருந்தவர் எழுந்து வந்தார். வெளியே பார்த்துட்டு எனக்கு எதிரே பேப்பரை விரிச்சு கிழே உட்கார்ந்தார். ரொம்ப நேரம் சீட்ல உட்கார முடியலை என்று சொன்னார். அட நம்ம போல தான் எல்லோரும் நினைக்கிறாங்க போல என்று நினைத்து கொண்டேன். மறுபடி கண்ணை மூடிக்கிட்டு ஐபாடுல ஓடிகிட்டு இருந்த ஒ பட்டர்பிளை பட்டர்பிளை பாட்டை கேட்டுகிட்டு இருந்தேன்.
திடீர்னு தம்பின்னு யாரோ கூப்பிடுற மாதிரி இருந்தது. கண்ணை துறந்து பார்த்தேன். என்ன தம்பி ஏதாவது குழப்பத்துல இருக்கீங்கலானு எதிர்க்க இருந்தவர் கேட்டார். எனக்கு ஒன்னும் புரியவில்லை. உங்களை தான் தம்பி கேக்குறேன் என்று மறுபடி சொன்னார். நான் அதெல்லாம் ஒன்னுமில்லையே என்றேன். இல்லை...நீங்க கண்ணை மூடிக்கிட்டு இருந்தப்போ உங்க முழி எங்கேயும் நகரலை. வழக்கமா தூக்கத்துல இருந்தாலோ இல்லை அசதியா இருந்தாலோ கண்ணை முடியிருந்தாலும் முழி அங்கேயும் இங்கேயும் நகரும். அதான் கேட்டேன் என்றார். இப்படி எல்லாம் வேற இருக்கா என்று எனக்கு தோன்றியது. அவரே தொடர்ந்தார். என்ன குழப்பம்னு உங்களுக்கு தோணுச்சுனா சொல்லுங்க தம்பி என்றார். நான் மறுபடி ஒண்ணுமில்லை சார் என்றேன்.
தம்பி உங்களை பார்த்தா ஐடி கம்பெனியில வேலை பாக்குற மாதிரி தெரியுது என்றார். நான் ஆமாம் என்றேன். உங்க ப்ரொஜெக்ட்ல ஏதாவது பிரச்சினைனா என்ன பண்ணுவீங்க தம்பி என்றார். எனக்கு ஏன் இதை கேட்கிறார் என்று புரியவில்லை. இவருக்கு எதுக்கு பதில் சொல்லனும்னு என்ற எண்ணம் கூட எனக்கு வரவில்லை. பிரச்சினையை தீர்க்கிறதுக்கு என்ன வழிகள் இருக்குன்னு பேசி ஒரு முடிவுக்கு வருவோம் என்றேன். முடிந்த வரை டெக்னிக்கல் வார்த்தைகளை உபயோகிக்காமல் பதில் சொன்னேன். அப்படியும் தீரலைனா என்றார். அதே மாதிரி பிரச்சினை இதுக்கு முன்னாடி வேற ப்ரொஜெக்ட்ல யாராவது சந்திச்சு இருந்து தீர்த்திருந்தா அவங்களோட வழிகாட்டுதலோட தீர்ப்போம் என்றேன். ஏன் தம்பி..வேலையில இப்படி மத்தவங்களை கேக்குறது மாதிரி வாழ்க்கையில் சொந்த பிரச்சினைக்கு வழி கேட்டா குழப்பம் இருக்காதுல என்றார். எனக்கு சுரீர் என்றது.
இவர் ஏன் இதெல்லாம் நம்மகிட்டே சொல்றார் என்ற வியப்பு அடங்குமுன் அவரே தொடர்ந்தார். என்ன பிரச்சினைன்னு பெத்தவங்க கிட்டே பசங்க சொன்னா அவங்க வழி சொல்ல போறாங்க. அவங்களும் உங்களை மாதிரி வயசு பருவங்களை தாண்டி தானே வந்திருக்காங்க. ஏன் அவங்க கூட காதலை சந்திச்சு தாண்டி வந்தவங்களா இருக்கலாம். பெத்தவங்க யாரும் கண்ணை மூடிக்கிட்டு காதலை எதிர்க்கிறது இல்லை. சமூகத்தோட பார்வை ரொம்ப மாறி போச்சு தம்பி. இப்போ உங்களையே ப்ரொஜெக்ட்ல மதிக்கலைன்னு வெச்சுக்கோங்க, நீங்க அந்த வேலையை விட்டுட்டு வேற வேலைக்கு போவீங்க தானே. அதையே தான் பெத்தவங்களும் காதலை பொறுத்த வரை செய்யுறாங்க. ஆனா அது மட்டும் பசங்களுக்கு புடிக்காது. எதுவும் குழப்பமா இருந்தா முடிவெடுக்கிறதுக்கு முன்னாடி வீட்டுல இருக்கிற பெரியவங்க கிட்டே கேளுங்க..அவங்களும் அனுபவிச்சு வந்தவங்க தானே தம்பி என்றார். சார் எனக்கு ஒரு குழப்பமும் இல்லை என்றேன்.
இப்போது ரயில் பாலூர் தாண்டி சென்று கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் பழைய சீவரம் வந்து விடும். அவர் பாரிமுனையில் இருக்கும் அரசு அலுவலகம் ஒன்றில் வேலை பார்ப்பதாகவும், தனக்கு என் வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் சொன்னார். தினமும் இதே ரயிலில் தான் பழைய சீவரத்தில் இருந்து சென்று வருவதாகவும் சொன்னார். அவர் எழுந்து பேப்பரை மடித்து பையில் வைத்தார். பழைய சீவரத்தில் இறங்கி பெருமாள் கோவிலை நோக்கி நடந்தார். மணி ஒன்பது அரை ஆகியிருந்தது.
நான் என்னோட போனை எடுத்து நண்பனுக்கு டயல் செய்தேன். அதற்குள் தூங்கி விட்டிருந்தான். அவன் போனை எடுத்ததும் அனுபவம் பேசுமா டா? என்றேன். டேய்...போன வாரம் உன் முதல் செல்போன் நம்பர் நியாபகம் இருக்கானு கேக்குறே..இப்போ அனுபவம் பேசுமான்னு கேக்குறே...என்னடா ஆச்சு உனக்கு?..என்றான்..நான் மறுபடி ட்டேன்...அனுபவம் பேசுமா?...பேசும் என்றான். என் முன்னாடி இப்போ தான்டா சம்மணம் போட்டு உட்கார்ந்து பேசிட்டு போகுது என்றேன். அவன் போனை கட் செய்துவிட்டிருந்தான்.
நெரிசலில் நெருக்கி தள்ளி ஒரு வழியாக உள்ளே சென்றேன். ஓரளவுக்கு ஏதுவாக நின்று கொண்டு பையில் வைத்திருந்த ஐபாடை எடுத்து காதில் சொருகி கொண்டேன். பெருங்களத்தூரில் கொஞ்சம் கூட்டம் இறங்கியது. புதுப்பட பாடல்களில் இருந்து இளையாரஜவிற்கு தாவினேன் - மனோவின் குரலில் 'ஒ பிரியா பிரியா' பாடியது. அது வரை பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர் "இந்த போன் கொரியன் செட்டா சார்" என்று கேட்டார். நான் காதில் இருந்து இயர் போன்களை எடுத்து விட்டு, இல்லைங்க இது ஒரிஜினல் கம்பெனி பீஸ் தான் என்றேன். அப்படியா சார், பேட்டரி எவ்ளோ நேரம் நிக்கும் என்றார். நான் குறைந்தது எட்டு மணி நேரம் நிக்கும் என்றேன். அவரிடம் இது போன் இல்லை வெறும் பாட்டு கேக்குறதுக்கு தான் என்று சொல்ல எத்தனித்த போது அவர் வண்டலூரில் இறங்கியே விட்டார்.
கூடுவாஞ்சேரியில் உட்கார இடம் கிடைத்தது. ஐபாடை எடுத்து உள்ளே வைத்து விட்டு பையில் வைத்திருந்த வண்ணநிலவனின் ரெயினீஸ் ஐயர் தெருவை படிக்க ஆரம்பித்தேன். செங்கல்பட்டில் ஐந்து நிமிடம் நின்று சிக்னல் கிடைத்த பிறகு தான் ரயில் புறப்படும். அதற்குள் பின்னாடி இருக்கும் பெட்டிக்கு சென்று விட்டால் காஞ்சிபுரத்தில் பிளாட்பாரத்தில் இறங்கி ரொம்ப தூரம் நடக்க வேண்டி இருக்காது. இறங்கி பின்னாலிருந்து மூன்றாவது பெட்டிக்கு சென்று ஜன்னலோரமாய் அமர்ந்து கொண்டேன். எனக்கு எதிரே ஐம்பதுக்கும் மேல வயசு இருக்கிற ஒருத்தர் உட்கார்ந்திருந்தார். கையில இருந்த மாலை மலரை பைக்குள்ள வெச்சிட்டு என்னை பார்த்தார். நான் மறுபடியும் ஐபாடை எடுத்து காதுக்கு கொடுத்தேன். ரயில் நிலையம் பக்கத்தில் இருக்கும் ஏரியில் இருந்து காற்று வீசி கொண்டிருந்தது. ரயிலில் எரியும் விளக்கிற்கு ஏகமாக பூச்சிகள் பறந்து வந்து கொண்டிருந்தன.
நிறைய விஷயங்களை பத்தி நினைச்சுகிட்டே பாட்டை கேட்டுகிட்டு இருந்தேன். ரயில் புறப்பட்டு கொஞ்சம் தூரம் போயிருக்கும். தொடர்ந்து சீட்ல உட்கார கஷ்டமா இருக்கேன்னு எழுந்து கதவுக்கு பக்கத்துல போய் நின்றேன். காற்று சுகமா இருந்தது. கண்ணை மூடிக்கிட்டு கம்பியை புடிச்சிக்கிட்டு நின்று கொண்டிருந்தேன். பாலூர் ஸ்டேஷன் வர இன்னும் பத்து நிமிஷம் ஆகும். கொஞ்ச நேரத்துல எனக்கு எதிரே உட்கார்ந்திருந்தவர் எழுந்து வந்தார். வெளியே பார்த்துட்டு எனக்கு எதிரே பேப்பரை விரிச்சு கிழே உட்கார்ந்தார். ரொம்ப நேரம் சீட்ல உட்கார முடியலை என்று சொன்னார். அட நம்ம போல தான் எல்லோரும் நினைக்கிறாங்க போல என்று நினைத்து கொண்டேன். மறுபடி கண்ணை மூடிக்கிட்டு ஐபாடுல ஓடிகிட்டு இருந்த ஒ பட்டர்பிளை பட்டர்பிளை பாட்டை கேட்டுகிட்டு இருந்தேன்.
திடீர்னு தம்பின்னு யாரோ கூப்பிடுற மாதிரி இருந்தது. கண்ணை துறந்து பார்த்தேன். என்ன தம்பி ஏதாவது குழப்பத்துல இருக்கீங்கலானு எதிர்க்க இருந்தவர் கேட்டார். எனக்கு ஒன்னும் புரியவில்லை. உங்களை தான் தம்பி கேக்குறேன் என்று மறுபடி சொன்னார். நான் அதெல்லாம் ஒன்னுமில்லையே என்றேன். இல்லை...நீங்க கண்ணை மூடிக்கிட்டு இருந்தப்போ உங்க முழி எங்கேயும் நகரலை. வழக்கமா தூக்கத்துல இருந்தாலோ இல்லை அசதியா இருந்தாலோ கண்ணை முடியிருந்தாலும் முழி அங்கேயும் இங்கேயும் நகரும். அதான் கேட்டேன் என்றார். இப்படி எல்லாம் வேற இருக்கா என்று எனக்கு தோன்றியது. அவரே தொடர்ந்தார். என்ன குழப்பம்னு உங்களுக்கு தோணுச்சுனா சொல்லுங்க தம்பி என்றார். நான் மறுபடி ஒண்ணுமில்லை சார் என்றேன்.
தம்பி உங்களை பார்த்தா ஐடி கம்பெனியில வேலை பாக்குற மாதிரி தெரியுது என்றார். நான் ஆமாம் என்றேன். உங்க ப்ரொஜெக்ட்ல ஏதாவது பிரச்சினைனா என்ன பண்ணுவீங்க தம்பி என்றார். எனக்கு ஏன் இதை கேட்கிறார் என்று புரியவில்லை. இவருக்கு எதுக்கு பதில் சொல்லனும்னு என்ற எண்ணம் கூட எனக்கு வரவில்லை. பிரச்சினையை தீர்க்கிறதுக்கு என்ன வழிகள் இருக்குன்னு பேசி ஒரு முடிவுக்கு வருவோம் என்றேன். முடிந்த வரை டெக்னிக்கல் வார்த்தைகளை உபயோகிக்காமல் பதில் சொன்னேன். அப்படியும் தீரலைனா என்றார். அதே மாதிரி பிரச்சினை இதுக்கு முன்னாடி வேற ப்ரொஜெக்ட்ல யாராவது சந்திச்சு இருந்து தீர்த்திருந்தா அவங்களோட வழிகாட்டுதலோட தீர்ப்போம் என்றேன். ஏன் தம்பி..வேலையில இப்படி மத்தவங்களை கேக்குறது மாதிரி வாழ்க்கையில் சொந்த பிரச்சினைக்கு வழி கேட்டா குழப்பம் இருக்காதுல என்றார். எனக்கு சுரீர் என்றது.
இவர் ஏன் இதெல்லாம் நம்மகிட்டே சொல்றார் என்ற வியப்பு அடங்குமுன் அவரே தொடர்ந்தார். என்ன பிரச்சினைன்னு பெத்தவங்க கிட்டே பசங்க சொன்னா அவங்க வழி சொல்ல போறாங்க. அவங்களும் உங்களை மாதிரி வயசு பருவங்களை தாண்டி தானே வந்திருக்காங்க. ஏன் அவங்க கூட காதலை சந்திச்சு தாண்டி வந்தவங்களா இருக்கலாம். பெத்தவங்க யாரும் கண்ணை மூடிக்கிட்டு காதலை எதிர்க்கிறது இல்லை. சமூகத்தோட பார்வை ரொம்ப மாறி போச்சு தம்பி. இப்போ உங்களையே ப்ரொஜெக்ட்ல மதிக்கலைன்னு வெச்சுக்கோங்க, நீங்க அந்த வேலையை விட்டுட்டு வேற வேலைக்கு போவீங்க தானே. அதையே தான் பெத்தவங்களும் காதலை பொறுத்த வரை செய்யுறாங்க. ஆனா அது மட்டும் பசங்களுக்கு புடிக்காது. எதுவும் குழப்பமா இருந்தா முடிவெடுக்கிறதுக்கு முன்னாடி வீட்டுல இருக்கிற பெரியவங்க கிட்டே கேளுங்க..அவங்களும் அனுபவிச்சு வந்தவங்க தானே தம்பி என்றார். சார் எனக்கு ஒரு குழப்பமும் இல்லை என்றேன்.
இப்போது ரயில் பாலூர் தாண்டி சென்று கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் பழைய சீவரம் வந்து விடும். அவர் பாரிமுனையில் இருக்கும் அரசு அலுவலகம் ஒன்றில் வேலை பார்ப்பதாகவும், தனக்கு என் வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் சொன்னார். தினமும் இதே ரயிலில் தான் பழைய சீவரத்தில் இருந்து சென்று வருவதாகவும் சொன்னார். அவர் எழுந்து பேப்பரை மடித்து பையில் வைத்தார். பழைய சீவரத்தில் இறங்கி பெருமாள் கோவிலை நோக்கி நடந்தார். மணி ஒன்பது அரை ஆகியிருந்தது.
நான் என்னோட போனை எடுத்து நண்பனுக்கு டயல் செய்தேன். அதற்குள் தூங்கி விட்டிருந்தான். அவன் போனை எடுத்ததும் அனுபவம் பேசுமா டா? என்றேன். டேய்...போன வாரம் உன் முதல் செல்போன் நம்பர் நியாபகம் இருக்கானு கேக்குறே..இப்போ அனுபவம் பேசுமான்னு கேக்குறே...என்னடா ஆச்சு உனக்கு?..என்றான்..நான் மறுபடி ட்டேன்...அனுபவம் பேசுமா?...பேசும் என்றான். என் முன்னாடி இப்போ தான்டா சம்மணம் போட்டு உட்கார்ந்து பேசிட்டு போகுது என்றேன். அவன் போனை கட் செய்துவிட்டிருந்தான்.
Friday, November 20, 2009
ஜன்னலின் வழியே...
பக்கத்து வீட்டு வள்ளி அக்கா எல்லோரிடமும் அன்போடு நன்றாக சிரித்து பேசுவாள். ராஜு மாமா, வள்ளி அக்காவின் கணவர், காலையில் ஏழு மணிக்கு ரயில் பிடித்தால், வேலை முடிந்து இரவு எட்டரை மணிக்கு தான் வீட்டுக்கு வருவார். குழந்தைகள் குமாரும், ராணியும் பள்ளி முடிந்து வீடு வர ஆறு மணி ஆகிவிடும். வந்ததும் குமாரும், ராணியும் நேரே டி.வி முன் சென்று உட்கார்ந்து கொள்வார்கள். அதன் பிறகு ஜெட்டிக்ஸ் அல்லது கார்ட்டூன் நெட்வொர்க் டி.வி தான் அவர்கள் உலகம். ஆனால் வள்ளி அக்காவின் உலகமே வேறு. வேடிக்கை பார்ப்பதும், அக்கம் பக்கத்தாருடன் பேசுவதும் எப்போதும் ஜன்னலின் வழியே தான், இல்லை ஜன்னலின் வழியே மட்டும் தான் என்று சொல்ல வேண்டும்.
வள்ளி அக்கா எங்கள் பக்கத்து வீட்டிற்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிறது. இதுவரை அவள் வெளியே சென்றது என்று நினைவில் இருப்பவை வெகு சில நாட்கள் மட்டுமே. கோடை விடுமுறையின் போது குழந்தைகளை சென்னையில் உள்ள ராஜு மாமாவின் தங்கை வீட்டிற்கு அழைத்து செல்லும் போதும், குழந்தைகளின் பிறந்த நாளில் கோவிலுக்கு செல்லும் போதும் தான் வள்ளி அக்கா வெளியே வருவாள். கோவில் உற்சவங்களின் போது சாமி தரிசனம் செய்ய மற்ற எல்லோரும் வெளியே வந்தால் கூட வள்ளி அக்கா மட்டும் ஜன்னலின் வழியே சேவித்து விட்டு கன்னத்தில் போட்டுக் கொள்வாள்.
எங்கள் வீட்டின் ஜன்னலுக்கும் வள்ளி அக்கா வீட்டின் ஜன்னலுக்கும் இடையே வெறும் மூன்றடி இடைவெளி தான். என் அண்ணி அடிக்கடி கேட்கும் "ஏன்க்கா இப்படி வீட்டுக்குள்ளயே இருக்குற?" என்ற கேள்விக்கு வள்ளி அக்கா எப்போதும் சொல்லும் பதில் இதுதான் - ஜன்னலின் வழியே தான் உலகம் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. எனக்கும் உலகத்தை அப்படி பார்ப்பது தான் பிடித்திருக்கிறது என்பாள். எனக்கு தெரிந்து எங்கள் வீட்டிற்கே இதுவரை பத்து முறைக்கு மேல் வந்திருக்க மாட்டாள். நவராத்திரி கொலுவின் போது கடைசி நாள் மட்டும் வள்ளி அக்கா தவறாமல் வருவாள்.
வெளியே செல்வது அரிதே என்றாலும் வள்ளி அக்கா ஆடைகள் உடுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்துவாள். ஜன்னலின் வழியே என் அண்ணியிடம் எப்படி இருக்குது என்று குறைந்தது மூன்று அல்லது நான்கு முறையாவது கேட்காமல் இருக்க மாட்டாள். வள்ளி அக்கா விதவிதமாகவும் சுவையாகவும் சமைப்பதில் ரொம்ப அக்கறை காட்டுவாள். அவள் சமைப்பதில் கொஞ்சம், வாரத்தில் இரண்டு முறையாவது எங்கள் வீட்டுக்கும் வந்துவிடும் - ஜன்னலின் வழியே தான். அதற்கென ஒரு நீண்ட இரும்பு கம்பியும் சிறிய தூக்கும் வைத்திருப்பாள்.
ஒரு முறை வள்ளி அக்காவிடம் ஜன்னலின் வழியே பேசிக் கொண்டிருந்த போது சொன்னாள் - உனக்கொன்னு தெரியுமா சீனு? வெளிச்சம் குறைவான இடத்திலிருந்து ஜன்னல் வழியே பார்த்தால் வெளிச்சம் அதிகம் உள்ள இடத்தின் காட்சிகள் தெளிவாய் தெரியும். நீ வேணும்னா அடுத்த முறை பார்க்கும் போது கவனி என்றாள். இந்த மாதிரி ஒரு விஷயத்தை இதுவரை நான் யோசித்தது கூட கிடையாது. வள்ளி அக்கா அதிகம் படித்தவளில்லை. எப்படி அவளுக்கு இதெல்லாம் யோசிக்க தோன்றுகிறது என்று ஆச்சர்யமாய் இருந்தது.
ஒரு முறை மின்தடையின் போது விளக்கேற்ற மனமின்றி ஏதோ யோசனையில் ஆழ்ந்து இருந்தேன். வள்ளி அக்கா வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி இருந்தாள். குமாரும் ராணியும் மெழுகின் வெளிச்சத்தில் கைகளை மடக்கி நிழல் உருக்களை உருவாக்கி விளையாடி கொண்டிருந்தார்கள். இங்கிருந்து பார்க்கையில் வள்ளி அக்கா சொன்னது உண்மை தான் என்று தோன்றியது. ஜன்னலின் வழியே நடக்கும் நிகழ்வுகளை பற்றி வள்ளி அக்கா வேறு என்னவெல்லாம் ஆராய்ச்சி செய்து வைத்திருக்கிறாளோ தெரியவில்லை. எல்லோருக்கும் சிறு வயதில், பயணங்களின் போது ஜன்னல் சீட் வேண்டும் என்று ஒரு ஆசை இருக்கும். வள்ளி அக்காவிற்கு அந்த ஆசை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது போலும் என்று தோன்றியது.
ஒரு முறை ரயிலில் இருந்து இறங்கும் போது என் வலது கால் பிசகி விட்டது. ஐந்து நாட்கள் வீட்டில் இருக்கும் படி நேர்ந்தது. ஒரு நாள் ஜன்னலின் வழியே வள்ளி அக்கா, அண்ணி, நான் மூவரும் பேசிக் கொண்டிருந்தோம். வள்ளி அக்கா மிகுந்த ஆவலோடு இருட்டிக் கொண்டு வந்த கருமேகத்தை பார்த்தபடி இருந்தாள். மழை வரும் போல் தெரிகிறது-என்றேன் நான். ஆமாம் சீனு! மழை பெய்யத்தான் போறது பாரேன். ஆனா நாம தான் ஜன்னல் வழியா வெயில வீட்டுக்குள்ள விடுற மாதிரி மழையை அனுமதிக்கிறதில்லை என்றாள். எத்தனை உண்மை அது. ஜன்னலின் வழியே வெயில் நம் வீடுகளுக்குள் ஊர்ந்து போவதை போல் மழையின் சாரலை விழ விடுவதில்லை. வள்ளி அக்கா அன்று மழையின் போது ஜன்னல்களை மூடாமல் சாரலில் நனைந்தபடி இருந்தாள். ஜன்னல் வழி உலகம் அவளுக்கு பிடித்திருந்ததை போல வேறு யாருக்காவது பிடித்திருக்குமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
திடீரென ஒரு நாள் அண்ணியிடம், ராஜு மாமாவிற்கு பொன்மலைக்கு மாற்றலாகி இருப்பதாகவும், இன்னும் மூன்று நாட்களில் வீட்டையும் காலி செய்யப் போவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தாள் வள்ளி அக்கா. பசங்களுக்கும் விஜய தசமியில் ஸ்கூல் சேர்த்து விட முடியும் என்றும் கூறினாள். அங்கே பார்த்து இருக்கும் வீட்டில் ஜன்னல் கம்பிகள் இங்கிருப்பது போல் அழகாய் இல்லை என்றும் சொன்னாள். உங்களை எல்லாம் அடிக்கடி நினைச்சுக்குவேன். என்னை மறந்துடாதீங்க என்று கண்களில் நீரை வைத்துக் கொண்டாள். அவள் கிளம்பிய அன்று நவராத்திரியின் ஏழாவது நாள். போகும் போது கூட ஒரு மணி நேரம் ஜன்னல் அருகே நின்று கண்ணீர் சிந்தி இருக்கிறாள். இந்த முறை அவள் நவராத்திரி கடைசி நாள் எங்கள் வீட்டுக்கு வர முடியாது. அவளுடைய வீட்டு ஜன்னல் மூடிக்கிடந்தது.
வள்ளி அக்கா வீடு மாறிப்போய் இரண்டு வாரம் ஆகிவிட்டது. ஜன்னலுக்கும் வள்ளி அக்கவிற்குமான உறவு வார்த்தைகளில் சொல்ல முடியாதது. ஜன்னலின் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். வள்ளி அக்கா சொன்னது போல் ஜன்னலின் வழியே உலகம் அழகாய்த்தான் இருக்கிறது. அவள் போன பின் மூடிய ஜன்னல்கள் திறக்கப்படுவதே இல்லை. புதிதாய் குடி வந்தவர்களின் உலகம் எப்போதும் இந்த மூடப்பட்ட ஜன்னல்களுக்கு பின்னால் தான். எப்போது ஜன்னலை பார்த்தாலும் வள்ளி அக்காவின் நினைவு வந்து போவதை தடுக்க முடிவதில்லை. காற்றில் துகள்கள் பறந்த படி இருந்தன. வெளிச்சம் எங்கள் வீட்டுக்குள் வந்து விழுந்து கொண்டிருந்தது - ஜன்னலின் வழியே...
வள்ளி அக்கா எங்கள் பக்கத்து வீட்டிற்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிறது. இதுவரை அவள் வெளியே சென்றது என்று நினைவில் இருப்பவை வெகு சில நாட்கள் மட்டுமே. கோடை விடுமுறையின் போது குழந்தைகளை சென்னையில் உள்ள ராஜு மாமாவின் தங்கை வீட்டிற்கு அழைத்து செல்லும் போதும், குழந்தைகளின் பிறந்த நாளில் கோவிலுக்கு செல்லும் போதும் தான் வள்ளி அக்கா வெளியே வருவாள். கோவில் உற்சவங்களின் போது சாமி தரிசனம் செய்ய மற்ற எல்லோரும் வெளியே வந்தால் கூட வள்ளி அக்கா மட்டும் ஜன்னலின் வழியே சேவித்து விட்டு கன்னத்தில் போட்டுக் கொள்வாள்.
எங்கள் வீட்டின் ஜன்னலுக்கும் வள்ளி அக்கா வீட்டின் ஜன்னலுக்கும் இடையே வெறும் மூன்றடி இடைவெளி தான். என் அண்ணி அடிக்கடி கேட்கும் "ஏன்க்கா இப்படி வீட்டுக்குள்ளயே இருக்குற?" என்ற கேள்விக்கு வள்ளி அக்கா எப்போதும் சொல்லும் பதில் இதுதான் - ஜன்னலின் வழியே தான் உலகம் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. எனக்கும் உலகத்தை அப்படி பார்ப்பது தான் பிடித்திருக்கிறது என்பாள். எனக்கு தெரிந்து எங்கள் வீட்டிற்கே இதுவரை பத்து முறைக்கு மேல் வந்திருக்க மாட்டாள். நவராத்திரி கொலுவின் போது கடைசி நாள் மட்டும் வள்ளி அக்கா தவறாமல் வருவாள்.
வெளியே செல்வது அரிதே என்றாலும் வள்ளி அக்கா ஆடைகள் உடுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்துவாள். ஜன்னலின் வழியே என் அண்ணியிடம் எப்படி இருக்குது என்று குறைந்தது மூன்று அல்லது நான்கு முறையாவது கேட்காமல் இருக்க மாட்டாள். வள்ளி அக்கா விதவிதமாகவும் சுவையாகவும் சமைப்பதில் ரொம்ப அக்கறை காட்டுவாள். அவள் சமைப்பதில் கொஞ்சம், வாரத்தில் இரண்டு முறையாவது எங்கள் வீட்டுக்கும் வந்துவிடும் - ஜன்னலின் வழியே தான். அதற்கென ஒரு நீண்ட இரும்பு கம்பியும் சிறிய தூக்கும் வைத்திருப்பாள்.
ஒரு முறை வள்ளி அக்காவிடம் ஜன்னலின் வழியே பேசிக் கொண்டிருந்த போது சொன்னாள் - உனக்கொன்னு தெரியுமா சீனு? வெளிச்சம் குறைவான இடத்திலிருந்து ஜன்னல் வழியே பார்த்தால் வெளிச்சம் அதிகம் உள்ள இடத்தின் காட்சிகள் தெளிவாய் தெரியும். நீ வேணும்னா அடுத்த முறை பார்க்கும் போது கவனி என்றாள். இந்த மாதிரி ஒரு விஷயத்தை இதுவரை நான் யோசித்தது கூட கிடையாது. வள்ளி அக்கா அதிகம் படித்தவளில்லை. எப்படி அவளுக்கு இதெல்லாம் யோசிக்க தோன்றுகிறது என்று ஆச்சர்யமாய் இருந்தது.
ஒரு முறை மின்தடையின் போது விளக்கேற்ற மனமின்றி ஏதோ யோசனையில் ஆழ்ந்து இருந்தேன். வள்ளி அக்கா வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி இருந்தாள். குமாரும் ராணியும் மெழுகின் வெளிச்சத்தில் கைகளை மடக்கி நிழல் உருக்களை உருவாக்கி விளையாடி கொண்டிருந்தார்கள். இங்கிருந்து பார்க்கையில் வள்ளி அக்கா சொன்னது உண்மை தான் என்று தோன்றியது. ஜன்னலின் வழியே நடக்கும் நிகழ்வுகளை பற்றி வள்ளி அக்கா வேறு என்னவெல்லாம் ஆராய்ச்சி செய்து வைத்திருக்கிறாளோ தெரியவில்லை. எல்லோருக்கும் சிறு வயதில், பயணங்களின் போது ஜன்னல் சீட் வேண்டும் என்று ஒரு ஆசை இருக்கும். வள்ளி அக்காவிற்கு அந்த ஆசை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது போலும் என்று தோன்றியது.
ஒரு முறை ரயிலில் இருந்து இறங்கும் போது என் வலது கால் பிசகி விட்டது. ஐந்து நாட்கள் வீட்டில் இருக்கும் படி நேர்ந்தது. ஒரு நாள் ஜன்னலின் வழியே வள்ளி அக்கா, அண்ணி, நான் மூவரும் பேசிக் கொண்டிருந்தோம். வள்ளி அக்கா மிகுந்த ஆவலோடு இருட்டிக் கொண்டு வந்த கருமேகத்தை பார்த்தபடி இருந்தாள். மழை வரும் போல் தெரிகிறது-என்றேன் நான். ஆமாம் சீனு! மழை பெய்யத்தான் போறது பாரேன். ஆனா நாம தான் ஜன்னல் வழியா வெயில வீட்டுக்குள்ள விடுற மாதிரி மழையை அனுமதிக்கிறதில்லை என்றாள். எத்தனை உண்மை அது. ஜன்னலின் வழியே வெயில் நம் வீடுகளுக்குள் ஊர்ந்து போவதை போல் மழையின் சாரலை விழ விடுவதில்லை. வள்ளி அக்கா அன்று மழையின் போது ஜன்னல்களை மூடாமல் சாரலில் நனைந்தபடி இருந்தாள். ஜன்னல் வழி உலகம் அவளுக்கு பிடித்திருந்ததை போல வேறு யாருக்காவது பிடித்திருக்குமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
திடீரென ஒரு நாள் அண்ணியிடம், ராஜு மாமாவிற்கு பொன்மலைக்கு மாற்றலாகி இருப்பதாகவும், இன்னும் மூன்று நாட்களில் வீட்டையும் காலி செய்யப் போவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தாள் வள்ளி அக்கா. பசங்களுக்கும் விஜய தசமியில் ஸ்கூல் சேர்த்து விட முடியும் என்றும் கூறினாள். அங்கே பார்த்து இருக்கும் வீட்டில் ஜன்னல் கம்பிகள் இங்கிருப்பது போல் அழகாய் இல்லை என்றும் சொன்னாள். உங்களை எல்லாம் அடிக்கடி நினைச்சுக்குவேன். என்னை மறந்துடாதீங்க என்று கண்களில் நீரை வைத்துக் கொண்டாள். அவள் கிளம்பிய அன்று நவராத்திரியின் ஏழாவது நாள். போகும் போது கூட ஒரு மணி நேரம் ஜன்னல் அருகே நின்று கண்ணீர் சிந்தி இருக்கிறாள். இந்த முறை அவள் நவராத்திரி கடைசி நாள் எங்கள் வீட்டுக்கு வர முடியாது. அவளுடைய வீட்டு ஜன்னல் மூடிக்கிடந்தது.
வள்ளி அக்கா வீடு மாறிப்போய் இரண்டு வாரம் ஆகிவிட்டது. ஜன்னலுக்கும் வள்ளி அக்கவிற்குமான உறவு வார்த்தைகளில் சொல்ல முடியாதது. ஜன்னலின் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். வள்ளி அக்கா சொன்னது போல் ஜன்னலின் வழியே உலகம் அழகாய்த்தான் இருக்கிறது. அவள் போன பின் மூடிய ஜன்னல்கள் திறக்கப்படுவதே இல்லை. புதிதாய் குடி வந்தவர்களின் உலகம் எப்போதும் இந்த மூடப்பட்ட ஜன்னல்களுக்கு பின்னால் தான். எப்போது ஜன்னலை பார்த்தாலும் வள்ளி அக்காவின் நினைவு வந்து போவதை தடுக்க முடிவதில்லை. காற்றில் துகள்கள் பறந்த படி இருந்தன. வெளிச்சம் எங்கள் வீட்டுக்குள் வந்து விழுந்து கொண்டிருந்தது - ஜன்னலின் வழியே...
Friday, November 13, 2009
காத்திருப்பின் ஒரு துளி
வேதரத்தினம் பிள்ளை பூங்கா - நாங்கள் எப்போதும் சந்தித்துக் கொள்ளும் இந்த பூங்கா ஊருக்கு சற்றே ஒதுக்குபுறமாகத் தான் இருக்கிறது. வீட்டுக்கு தெரியாமல் காதலிப்பவர்கள் பின் என்ன வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் இடங்களிலா சந்தித்துக் கொள்ள முடியும்? தாம்பரம் தாண்டி மாடம்பாக்கம் போகிற வழியில் இருக்கிறது.
பூங்காவில் என்னையும், வயதான ஒருவரையும் தவிர வேறு யாருமில்லை. குருவிகளையோ, அணிலையோ, பட்டாம்பூச்சியையோ பார்த்து ரசிக்கும் மனநிலையில் நான் இல்லை. அந்த வயதானவரும் அசதியில் இருப்பதாகத்தான் பட்டது.
நான் வந்து ஒரு மணி நேரமாகியாச்சு. அவள் இன்னும் வரவில்லை. ஃபோன் செய்தாலும் ரிங் போய்க்கிட்டே இருக்கு.மனம் நிலை கொள்ளாமல், அவள் ஏன் இன்னும் இங்கு வரவில்லை என்ற கேள்விக்கு ஆயிரமாயி்ரம் பதில்களில் சமாதானம் அடையாமல் தவித்துக் கொண்டிருந்தது.
வயதானவர் என்னருகில் வந்து நிற்பது போன்று இருந்தது. தலையை சொறிந்த படி நின்று கொண்டிருந்தார். சட்டைப் பையில் இருந்து ஒரு ஐம்பதை எடுத்து அவரிடத்தில் கொடுத்து நன்றாக சாப்பிடுங்கள் என்றேன். இந்த மாதிரி விஷயம் எல்லாம் அவளால பண்ண ஆரம்பிச்சது தான்.
தாம்பரம் வித்யா தியேட்டரில் 'பசங்க' படம் வந்திருந்த சமயம். நாங்கள் இருவரும் சென்று இருந்தோம்.அதன் பிறகு ஒரு முறை மாடம்பாக்கம் கோவிலுக்கு சென்றோம். பேருந்துக்காக நிறுத்தத்தில் பேசிக் கொண்டிருந்தோம். பாட்டி ஒருவர் வந்து நின்றார். திடீரென என் சட்டைப் பையில் இருந்து ஒரு ஐம்பதை எடுத்து அவரிடத்தில் கொடுத்து நன்றாக சாப்பிடுங்கள் என்றாள். அன்று முதல் இன்று வரை அவளின் மகிழ்ச்சிக்காக தொடர்ந்து கொண்டிருக்கிறேன். நல்ல விஷயம் தானே.
பூவரச மரத்தடியில் கிடந்த பெஞ்சில் இரண்டு கைகளையும் தலைக்குப் பின்னால் வைத்து கண்கள் மூடி படுத்துக்கொண்டேன். கடிகாரத்தின் டிக்-டிக் சத்தமும், இதயத்தின் லப்-டப் சத்தமும் ஒரு சேர காத்திருப்பின் அசுர நொடிகளை கடந்து கொண்டிருந்தது.
முன் பனியா..முதல் மழையா..
என் மனதில் ஏதோ விழுகிறதே..
விழுகிறதே..நனைகிறதே..ஓ..ஓ..ஓ..
புரியாத உறவில் நின்றேன்..அறியாத சு..
மறுமுனையில் இருந்து அவள் தான் பேசினாள். ஹலோ..இன்னும் ஒரு ட்வென்டி மினிட்ஸ் ஆகும் டா. செல்லம், ஸாரி டா, ப்ளீஸ் டா வெயிட் பண்ணு. சரியா ரொம்ப போர் அடிச்சா ஆப்போசிட் ஆவின் பூத்ல போய் ஒரு பால் சாப்பிடு.ஒகேவா?
நான் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தேன்.
என்னடா கோபமா? எதுவுமே பேச மாட்டேங்குற? - இது அவள்.
நான் கோவிச்சுக்கலைனா அவளுக்கு பிடிக்காது. நான் கோவிக்காதது மாதிரி அவ நடந்துக்கிட்டா எனக்கு பிடிக்காது.
பின்ன என்ன? எவ்வளவு நேரமா இங்க நின்னுக்கிட்டு இருக்கேன் தெரியுமா?
மெட்ராஸ்ல எல்லா இடத்துலயும் இருக்குற கொசு கூட இந்த பார்க்ல இல்லை, என்னைத் தவி்ர.
அவள் பதில் சொல்ல ஆரம்பித்தாள்-அது வந்து என்னென்னா? இந்த ராஜா இருக்கான்ல..அவனோ..
அவளை இடைமறித்து - இங்க பார். எனக்கு செம கடுப்பா இருக்கு. எவ்வளவு நேரமா வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன் தெரியுதா? நீ என்ன ரீசன் சொன்னாலும் சரி நான் கேட்க போறதில்ல சரியா.அடுத்த டென் மினிட்ஸ்ல நீ இங்க வரலை அப்புறம் அவ்ளோ தான். ஃபோனை கட் செய்தேன்
ஹலோ ட்யூன்ஸ்ல கூட சுகங்கிற வார்த்தைய கேட்க விடமாட்டேஙகுறாளே. வரட்டும் இன்னிக்கு என்று எனக்குள் முணுமுணுத்துக் கொண்டேன். காதலின் இலக்கணம் மீறப் படாமலே ரெண்டு பேரும் எங்க லெவல மெயின்டைன் பண்ணிக்கிட்டு இருந்தோம்.
அவள் வருவாளா..அவள் வருவாளா..அவள் வருவாளா..
என் உடைந்து போன நெஞ்சை ஓட்ட வைக்க அவள் வருவாளா..
ரொம்ப முக்கியம். வந்த கடுப்பை அடக்கிக் கொண்டு வேகமாக வந்து அந்த பாட்டு கேட்காதபடி பூங்கா பெஞ்சில் மறுபடி அமர்ந்து கொண்டேன். பாக்கெட்டில் வைத்திருந்த ஆப்பிள் ஐபாடை எடுத்து மாட்டிக் கொண்டு வழக்கம் போல இளையராஜாவின் மெலோடியில் நனைய தொடங்கினேன்.
ஆப்பிள் ஐபாடை போன பிறந்த நாளின் போது அவள் தான் பரிசளித்தாள்.அவளை சந்திக்க வரும் போதெல்லாம் அவள் வாங்கிக் கொடுத்த வாட்ச், அவளுக்கு பிடித்த கலர்ல காம்பினேஷன்ல டிரஸ், அவ வாங்கிக் கொடுத்த பொருட்கள் எல்லாம் இல்லைனா அவ்ளோ தான். ஏற்கனவே காதலிச்சவங்களுக்கு இந்த மாதிரி இத்தியாதிகள் எல்லாம் தெரிஞ்சு இருக்கும்.
அந்த பூங்காவின் வழியே செல்லும் பிகர்களை "அ..ஆ..இ..ஈ.." என்ற வரிசையில் வகைப்படுத்த தொடங்கினேன். எப்படியும் அவள் வந்ததும் கேட்பாள்-என்ன இன்னைக்கு எத்தனை பிகர்களை சைட் அடிச்சீங்க. நானும் ராமன் தான்னு சொல்லணும். நம்புறாலோ இல்லையோ அது வேற விஷயம்.
மனித வாழ்க்கையில் எவ்வளவு நேரம் காத்திருப்பில் கழிகிறது தெரியுமா என்று கவிஞன் எமர்சன் ஏற்கனவே கேட்டு வைத்தது நினைவிற்கு வந்து போனது. காத்திருப்பது ஒரு சுகமான அவஸ்தை என்று கொண்டாலும் காத்திருப்பின் இடைவெளிகளில் மனதின் ஒட்டங்கள் கவலையுடன் கூடிய ஒருவித எதிர்பார்ப்பை கூட்டி விடுகின்றன.
காத்திருப்பு
காத்திருப்பின் இடைவெளிகளில் நொடிகள் கூட கணம்
காத்திருப்பின் முடிவுகளில் நினைவுகள் கூட கணம்
காதலில் காத்துக் கிடப்பதும் காக்க வைப்பதும் எப்போதுமே சுகம்.
அட, நமக்குக் கூட கதை, கவிதை மாதிரி எதோ வருது பாரேன். ஐபாடை அணைத்து வைத்தேன். அடச்சே..என்ன இப்படி சம்பந்தமே இல்லாம எதையோ நினைச்சுக்கிட்டு இருக்கோம் என்று தோன்றியது.
என்னென்னோவோ யோசித்துக் கொண்டிருக்கையில், அவள் எனக்கு பின்னால் நின்று கொண்டு எனக்கு டயல் செய்தாள். என் செல்ஃபோன் பாடத் துவங்கியது.
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு...கனவை எடுத்து செல்ல வந்தேன்
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே...
கோபம் எல்லாம் எங்கோ சென்று ஒளிந்து கொள்ள, மெதுவாக திரும்பி அவளை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தேன். எனக்கு டைம் அவுட் என்பது மட்டும் அவள் பார்வையில் இருந்து புரிந்தது.
பூங்காவில் என்னையும், வயதான ஒருவரையும் தவிர வேறு யாருமில்லை. குருவிகளையோ, அணிலையோ, பட்டாம்பூச்சியையோ பார்த்து ரசிக்கும் மனநிலையில் நான் இல்லை. அந்த வயதானவரும் அசதியில் இருப்பதாகத்தான் பட்டது.
நான் வந்து ஒரு மணி நேரமாகியாச்சு. அவள் இன்னும் வரவில்லை. ஃபோன் செய்தாலும் ரிங் போய்க்கிட்டே இருக்கு.மனம் நிலை கொள்ளாமல், அவள் ஏன் இன்னும் இங்கு வரவில்லை என்ற கேள்விக்கு ஆயிரமாயி்ரம் பதில்களில் சமாதானம் அடையாமல் தவித்துக் கொண்டிருந்தது.
வயதானவர் என்னருகில் வந்து நிற்பது போன்று இருந்தது. தலையை சொறிந்த படி நின்று கொண்டிருந்தார். சட்டைப் பையில் இருந்து ஒரு ஐம்பதை எடுத்து அவரிடத்தில் கொடுத்து நன்றாக சாப்பிடுங்கள் என்றேன். இந்த மாதிரி விஷயம் எல்லாம் அவளால பண்ண ஆரம்பிச்சது தான்.
தாம்பரம் வித்யா தியேட்டரில் 'பசங்க' படம் வந்திருந்த சமயம். நாங்கள் இருவரும் சென்று இருந்தோம்.அதன் பிறகு ஒரு முறை மாடம்பாக்கம் கோவிலுக்கு சென்றோம். பேருந்துக்காக நிறுத்தத்தில் பேசிக் கொண்டிருந்தோம். பாட்டி ஒருவர் வந்து நின்றார். திடீரென என் சட்டைப் பையில் இருந்து ஒரு ஐம்பதை எடுத்து அவரிடத்தில் கொடுத்து நன்றாக சாப்பிடுங்கள் என்றாள். அன்று முதல் இன்று வரை அவளின் மகிழ்ச்சிக்காக தொடர்ந்து கொண்டிருக்கிறேன். நல்ல விஷயம் தானே.
பூவரச மரத்தடியில் கிடந்த பெஞ்சில் இரண்டு கைகளையும் தலைக்குப் பின்னால் வைத்து கண்கள் மூடி படுத்துக்கொண்டேன். கடிகாரத்தின் டிக்-டிக் சத்தமும், இதயத்தின் லப்-டப் சத்தமும் ஒரு சேர காத்திருப்பின் அசுர நொடிகளை கடந்து கொண்டிருந்தது.
****************************************************************************
செல்ஃபோனை எடுத்து அவள் நம்பருக்கு டயல் செய்தேன். எஸ்.பி.பியின் குரலில் ஹலோ ட்யூன்ஸ் கேட்கத் தொடங்கியது.முன் பனியா..முதல் மழையா..
என் மனதில் ஏதோ விழுகிறதே..
விழுகிறதே..நனைகிறதே..ஓ..ஓ..ஓ..
புரியாத உறவில் நின்றேன்..அறியாத சு..
மறுமுனையில் இருந்து அவள் தான் பேசினாள். ஹலோ..இன்னும் ஒரு ட்வென்டி மினிட்ஸ் ஆகும் டா. செல்லம், ஸாரி டா, ப்ளீஸ் டா வெயிட் பண்ணு. சரியா ரொம்ப போர் அடிச்சா ஆப்போசிட் ஆவின் பூத்ல போய் ஒரு பால் சாப்பிடு.ஒகேவா?
நான் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தேன்.
என்னடா கோபமா? எதுவுமே பேச மாட்டேங்குற? - இது அவள்.
நான் கோவிச்சுக்கலைனா அவளுக்கு பிடிக்காது. நான் கோவிக்காதது மாதிரி அவ நடந்துக்கிட்டா எனக்கு பிடிக்காது.
பின்ன என்ன? எவ்வளவு நேரமா இங்க நின்னுக்கிட்டு இருக்கேன் தெரியுமா?
மெட்ராஸ்ல எல்லா இடத்துலயும் இருக்குற கொசு கூட இந்த பார்க்ல இல்லை, என்னைத் தவி்ர.
அவள் பதில் சொல்ல ஆரம்பித்தாள்-அது வந்து என்னென்னா? இந்த ராஜா இருக்கான்ல..அவனோ..
அவளை இடைமறித்து - இங்க பார். எனக்கு செம கடுப்பா இருக்கு. எவ்வளவு நேரமா வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன் தெரியுதா? நீ என்ன ரீசன் சொன்னாலும் சரி நான் கேட்க போறதில்ல சரியா.அடுத்த டென் மினிட்ஸ்ல நீ இங்க வரலை அப்புறம் அவ்ளோ தான். ஃபோனை கட் செய்தேன்
ஹலோ ட்யூன்ஸ்ல கூட சுகங்கிற வார்த்தைய கேட்க விடமாட்டேஙகுறாளே. வரட்டும் இன்னிக்கு என்று எனக்குள் முணுமுணுத்துக் கொண்டேன். காதலின் இலக்கணம் மீறப் படாமலே ரெண்டு பேரும் எங்க லெவல மெயின்டைன் பண்ணிக்கிட்டு இருந்தோம்.
****************************************************************************
இன்னும் பத்து நிமிடங்கள் ஓட்ட வேண்டும். என்ன செய்வது என்று தெரியாமல் அவள் சொன்னது போல் ஆவின் பூத் நோக்கி நடக்கத் தொடங்கினேன். ஒரு பால் சொல்லி வாங்கிக் கொண்டு காசுக்காக பர்சை எடுக்கையில், எப்.எம்-மில் யாருடைய காதல் கதையையோ உம் கொட்டி கேட்டுக் கொண்டிருந்த லேடி சொன்னாள் - கடைசியா நம்மகிட்டே; பேசின நேயருக்காகவும்; உங்க எல்லோருக்காகவும்; நம்ம சின்ன மார்கண்டேயன்; சூர்யா நடித்த; நேருக்கு நேர் படத்தில் இருந்து;வரப்போற பாடலை கேளுங்க; கேட்டு ரசிங்க; தொடர்ந்து கால் பண்ணி பேசுங்க; அண்ட் இது உங்களின் காதல் கதை நேரம்... அவள் வருவாளா..அவள் வருவாளா..அவள் வருவாளா..
என் உடைந்து போன நெஞ்சை ஓட்ட வைக்க அவள் வருவாளா..
ரொம்ப முக்கியம். வந்த கடுப்பை அடக்கிக் கொண்டு வேகமாக வந்து அந்த பாட்டு கேட்காதபடி பூங்கா பெஞ்சில் மறுபடி அமர்ந்து கொண்டேன். பாக்கெட்டில் வைத்திருந்த ஆப்பிள் ஐபாடை எடுத்து மாட்டிக் கொண்டு வழக்கம் போல இளையராஜாவின் மெலோடியில் நனைய தொடங்கினேன்.
ஆப்பிள் ஐபாடை போன பிறந்த நாளின் போது அவள் தான் பரிசளித்தாள்.அவளை சந்திக்க வரும் போதெல்லாம் அவள் வாங்கிக் கொடுத்த வாட்ச், அவளுக்கு பிடித்த கலர்ல காம்பினேஷன்ல டிரஸ், அவ வாங்கிக் கொடுத்த பொருட்கள் எல்லாம் இல்லைனா அவ்ளோ தான். ஏற்கனவே காதலிச்சவங்களுக்கு இந்த மாதிரி இத்தியாதிகள் எல்லாம் தெரிஞ்சு இருக்கும்.
அந்த பூங்காவின் வழியே செல்லும் பிகர்களை "அ..ஆ..இ..ஈ.." என்ற வரிசையில் வகைப்படுத்த தொடங்கினேன். எப்படியும் அவள் வந்ததும் கேட்பாள்-என்ன இன்னைக்கு எத்தனை பிகர்களை சைட் அடிச்சீங்க. நானும் ராமன் தான்னு சொல்லணும். நம்புறாலோ இல்லையோ அது வேற விஷயம்.
மனித வாழ்க்கையில் எவ்வளவு நேரம் காத்திருப்பில் கழிகிறது தெரியுமா என்று கவிஞன் எமர்சன் ஏற்கனவே கேட்டு வைத்தது நினைவிற்கு வந்து போனது. காத்திருப்பது ஒரு சுகமான அவஸ்தை என்று கொண்டாலும் காத்திருப்பின் இடைவெளிகளில் மனதின் ஒட்டங்கள் கவலையுடன் கூடிய ஒருவித எதிர்பார்ப்பை கூட்டி விடுகின்றன.
காத்திருப்பு
காத்திருப்பின் இடைவெளிகளில் நொடிகள் கூட கணம்
காத்திருப்பின் முடிவுகளில் நினைவுகள் கூட கணம்
காதலில் காத்துக் கிடப்பதும் காக்க வைப்பதும் எப்போதுமே சுகம்.
அட, நமக்குக் கூட கதை, கவிதை மாதிரி எதோ வருது பாரேன். ஐபாடை அணைத்து வைத்தேன். அடச்சே..என்ன இப்படி சம்பந்தமே இல்லாம எதையோ நினைச்சுக்கிட்டு இருக்கோம் என்று தோன்றியது.
என்னென்னோவோ யோசித்துக் கொண்டிருக்கையில், அவள் எனக்கு பின்னால் நின்று கொண்டு எனக்கு டயல் செய்தாள். என் செல்ஃபோன் பாடத் துவங்கியது.
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு...கனவை எடுத்து செல்ல வந்தேன்
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே...
கோபம் எல்லாம் எங்கோ சென்று ஒளிந்து கொள்ள, மெதுவாக திரும்பி அவளை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தேன். எனக்கு டைம் அவுட் என்பது மட்டும் அவள் பார்வையில் இருந்து புரிந்தது.
Wednesday, November 04, 2009
ஊரணி கரையோரம்
நீரு வத்திப் போய் பாலம் பாலமா வெடிச்சுக் கிடக்குது கரிசல்குளம் ஊரணி. ஊரணில தண்ணி நிக்குறத பார்த்தே பல வருசம் ஆச்சு. ஊர் பொங்கலின் முளைப்பாரி போது கூட வண்டியில தண்ணி கொண்டு வந்து விடுற நிலைதான் இன்னமும் நடக்குது என்று பெருமூச்சுடன் முத்தையா தனக்குள் நினைத்துக் கொண்டு இருந்தான்.
ஊரணிக்கு மேக்கால* இருக்குற கரையில தீக்குச்சிய வருசயா* அடுக்குன கணக்கா புளியமரங்க வருசயா நிக்கும். கீழக்கரையில* ஆலமரங்க நாலு பெருசா விழுது போட்டு கிளை பரப்பி நிக்கும். கடைசி ஆலமரத்த ஒட்டினாப்புல ஊருக்கு போற வண்டிப்பாதையும் எதிரே பேச்சியம்மாக் கோவிலும் இருக்கும். கீழக்கரையில ஊரு காவல் தெய்வம் அய்யனார் கோவிலும், கண்மாய்ல இருந்து மண் அடிக்குற வண்டிங்க போற பாதையும, கண்மாய் மதகை துறந்துவிட்டா தண்ணி வரதுக்கு கால்வாயும் இருக்கும். சின்னப் பிள்ளைங்க கண்மாய்க்கு போறதுன்னா ஓடியாந்துருங்க. வழி முழுக்க இலந்தை மரமும், கள்ளிச் செடியும் நெறய கிடக்கும்.
ஏய் புள்ள ராமாயி! அங்கிட்டு என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறவ? ஆடுங்கள எங்க காட்டுல மேய்க்க சொல்லி தான் உங்கப்பாரு சொன்னாராக்கும். புளியமரத்துக்கு கீழ உட்கார்ந்து இருந்தமேனிக்கு குரல் கொடுத்தான் முத்தையா.
மாமோய், உங்க காட்டுல எங்க வீட்டு வெஞ்சனத்துக்கே* வெள்ளாமையக் காணோம். இதுல எங்க வெள்ளாடுங்க திண்ணு தான் குறைஞ்சிற போகுதாக்கும் என்று ஆட்டுக்கு குலை ஒடிக்க துரட்டியுடன் நின்று இருந்த ராமாயி பதிலுக்கு கத்தினாள்.
மாமன்கிற மட்டு மருவாத* தெரியுதா இந்த கழுதைக்கு என்று முனகியபடி பேச்சியம்மன் கோவிலுக்கு நடந்தான் முத்தையா. ராமாயி மஞ்சனத்தி மரத்திலேறி ஆட்டுக்கு குலை ஒடித்துக் கொண்டே மாமன் போற திசைய பார்த்தபடி இருந்தாள்.
பேச்சியம்மன் கோவில் முன்னால ஆலமர விழுதுகள்ல ஊருல இருக்குற பொடிசுக ஊஞ்சலாட வந்துரும் எப்பவும். வெயிலா மழையானு கூட பாக்காதுங்க. கயித்து முனையில ஒரு பெரிய டயரை கட்டி ஒன்னு உட்காந்துக்க பின்னால இருந்து இன்னொன்னு தள்ளி விடும். எட்டு வயசு லட்சுமி - முத்தையாவோட அக்கா புள்ள - அங்குன தான் விளையாடிக்கிட்டு இருந்துச்சு. லட்சுமியை கூப்பிட்டு ராமாயியிடம் ஒத்த காயிதத்தை* கொடுத்துவர சொல்லிட்டு இடுப்பு வேட்டி மடிப்புல இருந்து ஒரு தேன்மிட்டாய எடுத்து அவ கையில திணிச்சான் முத்தையா.
காயிதத்துல ஊரணி ஒரமா இருக்குற மரத்துல ராமாயி துரட்டியோட குலை ஒடிச்சுக்கிட்டு இருக்குற கணக்கா அழகாக வரைஞ்சிருந்தான் முத்தையா. லட்சுமி ராமாயியிடம் அந்த காயிதத்தை கொடுக்க பூத்துக் கிடக்குற பருத்தி செடிகள தள்ளிக்கிட்டு போனா.
லட்சுமி வருவதை பார்த்த ராமாயி - "வாடி என் சின்ன சக்காளத்தி, என்ன கொடுத்துவுட்டாரு உன் புருஷன்னு" வம்புக்கு இழுத்தா.
என்னையா வையிற*...இரு...இரு...உன்னய எங்க ஐயப்பாகிட்ட சொல்லிக் கொடுக்குறேன். முத்தன் (முத்தையா என்று முழுசா சொல்ல வராது லட்சுமிக்கு) மாமா இத்த உன்கிட்ட கொடுத்தாற சொல்லுச்சுனு கொடுத்துட்டு ரெண்டு பருத்திப்பிஞ்ச பிடுங்கி திண்ணுக்கிட்டே போனா லட்சுமி.
ராமாயி காயிதத்த பிரிச்சு பார்த்தா. மரத்துல ராமாயி துரட்டியோட குலை ஒடிச்சுக்கிட்டு இருக்குற கணக்கா அழகாக - அட இது என்ன ஊரணியில தண்ணி நிறைஞ்சு நிக்குது. ராமாயிகிட்ட யாரும் இதுவர கதை* போட்டு செயிச்சது கிடையாது. மாமன் வரைஞ்ச கதை ராமாயிக்கு புரிய ஆரம்பிச்சுது - ஊரணியில தண்ணி நிறைஞ்சு நிக்குறது எப்படி நடக்காதோ அப்படி தான் வேற சாதியில பொறந்த நம்ம கல்யாணமும்னு முத்தையா மாமன் சொல்லாம சொல்லியிருக்குதுனு.
பொல பொலனு கண்ணுல வடியிற கண்ணீரோட ராமாயி சொன்னா.
என் மாமனுக்கு நெஞ்சுல ஈரம் மிச்சம்
எனக்காவது கண்ணுல ஈரம் மிச்சம்
ஈரம் இல்லாம போச்சே ஊரணிலயும்
ஊருல சாதிப்பேர சொல்லி அலையறவங்க மனசுலயும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
மேக்கால* - மேற்கில்; வருசயா* - வரிசையா; கீழக்கரை* - கிழக்கில் இருக்கும் கரை; வெஞ்சனம்* - சாதத்துடன் தொட்டுக் கொள்ள செய்யப்படும் காய்கறி; மருவாத* - மரியாதை; காயிதம்* - காகிதம்; வையுதல்* - திட்டுதல்; கதை* - விடுகதை
--------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊரணிக்கு மேக்கால* இருக்குற கரையில தீக்குச்சிய வருசயா* அடுக்குன கணக்கா புளியமரங்க வருசயா நிக்கும். கீழக்கரையில* ஆலமரங்க நாலு பெருசா விழுது போட்டு கிளை பரப்பி நிக்கும். கடைசி ஆலமரத்த ஒட்டினாப்புல ஊருக்கு போற வண்டிப்பாதையும் எதிரே பேச்சியம்மாக் கோவிலும் இருக்கும். கீழக்கரையில ஊரு காவல் தெய்வம் அய்யனார் கோவிலும், கண்மாய்ல இருந்து மண் அடிக்குற வண்டிங்க போற பாதையும, கண்மாய் மதகை துறந்துவிட்டா தண்ணி வரதுக்கு கால்வாயும் இருக்கும். சின்னப் பிள்ளைங்க கண்மாய்க்கு போறதுன்னா ஓடியாந்துருங்க. வழி முழுக்க இலந்தை மரமும், கள்ளிச் செடியும் நெறய கிடக்கும்.
ஏய் புள்ள ராமாயி! அங்கிட்டு என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறவ? ஆடுங்கள எங்க காட்டுல மேய்க்க சொல்லி தான் உங்கப்பாரு சொன்னாராக்கும். புளியமரத்துக்கு கீழ உட்கார்ந்து இருந்தமேனிக்கு குரல் கொடுத்தான் முத்தையா.
மாமோய், உங்க காட்டுல எங்க வீட்டு வெஞ்சனத்துக்கே* வெள்ளாமையக் காணோம். இதுல எங்க வெள்ளாடுங்க திண்ணு தான் குறைஞ்சிற போகுதாக்கும் என்று ஆட்டுக்கு குலை ஒடிக்க துரட்டியுடன் நின்று இருந்த ராமாயி பதிலுக்கு கத்தினாள்.
மாமன்கிற மட்டு மருவாத* தெரியுதா இந்த கழுதைக்கு என்று முனகியபடி பேச்சியம்மன் கோவிலுக்கு நடந்தான் முத்தையா. ராமாயி மஞ்சனத்தி மரத்திலேறி ஆட்டுக்கு குலை ஒடித்துக் கொண்டே மாமன் போற திசைய பார்த்தபடி இருந்தாள்.
பேச்சியம்மன் கோவில் முன்னால ஆலமர விழுதுகள்ல ஊருல இருக்குற பொடிசுக ஊஞ்சலாட வந்துரும் எப்பவும். வெயிலா மழையானு கூட பாக்காதுங்க. கயித்து முனையில ஒரு பெரிய டயரை கட்டி ஒன்னு உட்காந்துக்க பின்னால இருந்து இன்னொன்னு தள்ளி விடும். எட்டு வயசு லட்சுமி - முத்தையாவோட அக்கா புள்ள - அங்குன தான் விளையாடிக்கிட்டு இருந்துச்சு. லட்சுமியை கூப்பிட்டு ராமாயியிடம் ஒத்த காயிதத்தை* கொடுத்துவர சொல்லிட்டு இடுப்பு வேட்டி மடிப்புல இருந்து ஒரு தேன்மிட்டாய எடுத்து அவ கையில திணிச்சான் முத்தையா.
காயிதத்துல ஊரணி ஒரமா இருக்குற மரத்துல ராமாயி துரட்டியோட குலை ஒடிச்சுக்கிட்டு இருக்குற கணக்கா அழகாக வரைஞ்சிருந்தான் முத்தையா. லட்சுமி ராமாயியிடம் அந்த காயிதத்தை கொடுக்க பூத்துக் கிடக்குற பருத்தி செடிகள தள்ளிக்கிட்டு போனா.
லட்சுமி வருவதை பார்த்த ராமாயி - "வாடி என் சின்ன சக்காளத்தி, என்ன கொடுத்துவுட்டாரு உன் புருஷன்னு" வம்புக்கு இழுத்தா.
என்னையா வையிற*...இரு...இரு...உன்னய எங்க ஐயப்பாகிட்ட சொல்லிக் கொடுக்குறேன். முத்தன் (முத்தையா என்று முழுசா சொல்ல வராது லட்சுமிக்கு) மாமா இத்த உன்கிட்ட கொடுத்தாற சொல்லுச்சுனு கொடுத்துட்டு ரெண்டு பருத்திப்பிஞ்ச பிடுங்கி திண்ணுக்கிட்டே போனா லட்சுமி.
ராமாயி காயிதத்த பிரிச்சு பார்த்தா. மரத்துல ராமாயி துரட்டியோட குலை ஒடிச்சுக்கிட்டு இருக்குற கணக்கா அழகாக - அட இது என்ன ஊரணியில தண்ணி நிறைஞ்சு நிக்குது. ராமாயிகிட்ட யாரும் இதுவர கதை* போட்டு செயிச்சது கிடையாது. மாமன் வரைஞ்ச கதை ராமாயிக்கு புரிய ஆரம்பிச்சுது - ஊரணியில தண்ணி நிறைஞ்சு நிக்குறது எப்படி நடக்காதோ அப்படி தான் வேற சாதியில பொறந்த நம்ம கல்யாணமும்னு முத்தையா மாமன் சொல்லாம சொல்லியிருக்குதுனு.
பொல பொலனு கண்ணுல வடியிற கண்ணீரோட ராமாயி சொன்னா.
என் மாமனுக்கு நெஞ்சுல ஈரம் மிச்சம்
எனக்காவது கண்ணுல ஈரம் மிச்சம்
ஈரம் இல்லாம போச்சே ஊரணிலயும்
ஊருல சாதிப்பேர சொல்லி அலையறவங்க மனசுலயும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
மேக்கால* - மேற்கில்; வருசயா* - வரிசையா; கீழக்கரை* - கிழக்கில் இருக்கும் கரை; வெஞ்சனம்* - சாதத்துடன் தொட்டுக் கொள்ள செய்யப்படும் காய்கறி; மருவாத* - மரியாதை; காயிதம்* - காகிதம்; வையுதல்* - திட்டுதல்; கதை* - விடுகதை
--------------------------------------------------------------------------------------------------------------------------------
Wednesday, October 21, 2009
மௌனமாய் ஒரு மழைக்காலம்
ஜன்னலின் ஓரம் அமர்ந்து கண்ணாடியில் மழை போட்டுக் கொண்டு இருக்கும் நீர்க்கோலங்களை பார்த்தபடி இருந்தேன். எங்கிருந்தோ வரும் துளி ஒன்று, சிதறிக் கிடக்கும் நீர்த் துளிகளை ஒன்று சேர்த்தபடி கண்ணாடியில் ஓடிப்பிடித்து விளையாடி கொண்டிருந்தது. மழையை ரசிக்க கற்று கொடுத்தவள் கூட அவள் தான். அவளுக்கு மழை ரொம்பவும் பிடிக்கும், என்னை நனைக்காத போது மட்டும். தனியில் இருந்தால் மழையில் ஆனந்தமாய் நனைவாள். நான் உடன் இருந்தால் "இந்த மழைக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை" என்று மழையை கடிந்து கொள்வாள். எப்படி இவளால் மட்டும் அன்போடும் வாஞ்சையோடும் எப்போதும் இருக்க முடிகிறது என்று யோசித்தபடி, மழையாய் வழியும் அவள் நினைவுகளில் நனைந்து கொண்டு இருந்தேன். தேநீர் மணம் சட்டென்று நினைவுகளில் இருந்து என்னை மீளச் செய்தது.
என் கைகளில் ஏலக்காய் போட்ட தேனீர் கோப்பையைக் கொடுத்து விட்டு என் எதிரினில் அமர்ந்து கொண்டாள். அவளும் ஜன்னலின் வழியே மழையை பார்க்க ஆரம்பித்தாள். அவளுடைய தீவிரமான முகபாவம் அவள் மழையை ரசிக்கிறாளா இல்லை என்னைப் போலவே மழையால் தூண்டப்பட்ட வேறு ஏதேனும் நினைவுகளில் மூழ்கி இருக்கிறாளா என்று என்னை யோசிக்க வைத்தபடி இருந்தது. நான் அவள் கண்களை உற்று நோக்கினேன். ஆனால் அவளுடைய ஓரப்பார்வை கூட என் பக்கம் திரும்பவே இல்லை. நான் என்ன யோசிக்கிறேன் என்று அவளும் நினைப்பாளோ என்று எண்ணியபடி மறுபடி ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டேன். எங்கள் இருவருக்கும் இடையிலான மௌனம் அதன் வேலையை தொடங்கியிருந்தது. முன்பு எப்போதோ நான் எழுதிய கவிதை ஒன்று நினைவிற்கு வந்து தொலைத்தது.
மௌனம்
நம்மிடையே நிலவும் மௌனத்திற்கு என்ன வேலை தெரியுமா? - என்னை
உன்னை பற்றியே நினைக்கச் செய்வதும் - உன்னை
என்னை பற்றியே நினைக்காதது போல் நடிக்கச் செய்வதும் தான்.
மூடிய ஜன்னல் கதவுகளின் இடுக்குகள் வழியே குளிர் காற்று லேசாக ஊடுருவியபடி இருந்தது. குளிருக்கு ஏதுவாக அவள் தேனீர் கோப்பையை இரு கைகளிலும் அணைத்துப் பிடித்திருந்தாள். மழை இப்போது வலுத்து சத்தமாக பெய்யத் தொடங்கி இருந்தது. மழையின் சத்தத்தில், நான் அவளிடம் என்ன பேச வேண்டும் என்று யோசித்து வைத்திருந்தேனோ அவை யாவும் மனதிற்குள்ளாகவே கரைவது போல் இருந்தது. பழகாதவர்களிடம் கூட என்னால் சுலபமாய் பேசி விட முடிகிறது. ஆனால் பழகிய அவளிடம் தான் சொல்வதற்கு மிகவும் கடினமாக இருப்பதாக எனக்குப் பட்டது. என் முகத்தில் குழப்ப ரேகை ஓடுவதை அவள் கவனித்திருக்க்க் கூடும் என்று தோன்றியது. பிரச்சினை குறித்து முன்பாகவே அவள் யோசித்து முடித்திருக்கக் கூடும் என்பது அவளின் தெளிவான முகத்தை பார்த்து என்னால் யூகிக்க முடிந்தது. இருந்தாலும் யார் முதலில் மௌனத்தை உடைப்பது என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருந்தது.
கோப்பையைக் கீழே வைத்த போது அவளது வலது கையை என் இரு கைகளாலும் இறுக பற்றிக் கொண்டேன். அவள் தனது இடது கையை என் கைகளின் மீது வைத்துக் கொண்டாள். இருவரும் வார்த்தைகளை தொலைத்து விட்டிருந்தோம். ஏதும் பேசிக் கொள்ளவில்லை. எதுவும் பேச வேண்டும் என்று தோன்றவும் இல்லை.அவள் ஒரு சிறு குழந்தையை போல என் கை விரல்களை ஒவ்வொன்றாய் நீவி விட்ட படி இருந்தாள். இப்போது மழை நின்று போய் இருந்தது. இலைகளில் இருந்து துளிகள் வடிந்தபடி இருந்தன. ஓரிரு பூக்கள் லேசான காற்றில் சுற்றியபடி கீழே விழுந்து கொண்டிருந்தன. மண் வாசம் வீச ஆரம்பித்திருந்தது. மேல் திசையில் மேகங்களை விளக்கிக் கொண்டு சூரியன் தன் பொன் கிரணங்களை வீசத் தொடங்கி இருந்தது. தேங்கி கிடந்த நீரில் அவை ஒளிக்கோலங்களை போட்டுக் கொண்டு இருந்தது. என்றோ என் நாட்குறிப்பில் எழுதிய இரு வரிகளை மனக்கிடங்கில் இருந்து தோண்டி எடுத்தது மனது.
மௌனம்
சில நேரங்களில் சாதிக்கும்
சில நேரங்களில் சோதிக்கும்
எங்களின் மௌனத்தை எந்த வகையில் பொருத்துவது என்று புலப்படவில்லை. மௌனத்தின் இடைவெளியில் நடப்பவைகள் யாவும் ஒரு விதமான அசாதாரண சுழலை உண்டாக்கி விடுகிறது. மீண்டும் ஜன்னலின் வெளியே பார்த்தபடி இருந்தோம், கைகள் கோர்த்தபடி. மனமெங்கும் ஈரமேறிக் கிடப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. மழையின் மௌனத்தில் எங்களின் மௌனம் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டே இருந்தது.
என் கைகளில் ஏலக்காய் போட்ட தேனீர் கோப்பையைக் கொடுத்து விட்டு என் எதிரினில் அமர்ந்து கொண்டாள். அவளும் ஜன்னலின் வழியே மழையை பார்க்க ஆரம்பித்தாள். அவளுடைய தீவிரமான முகபாவம் அவள் மழையை ரசிக்கிறாளா இல்லை என்னைப் போலவே மழையால் தூண்டப்பட்ட வேறு ஏதேனும் நினைவுகளில் மூழ்கி இருக்கிறாளா என்று என்னை யோசிக்க வைத்தபடி இருந்தது. நான் அவள் கண்களை உற்று நோக்கினேன். ஆனால் அவளுடைய ஓரப்பார்வை கூட என் பக்கம் திரும்பவே இல்லை. நான் என்ன யோசிக்கிறேன் என்று அவளும் நினைப்பாளோ என்று எண்ணியபடி மறுபடி ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டேன். எங்கள் இருவருக்கும் இடையிலான மௌனம் அதன் வேலையை தொடங்கியிருந்தது. முன்பு எப்போதோ நான் எழுதிய கவிதை ஒன்று நினைவிற்கு வந்து தொலைத்தது.
மௌனம்
நம்மிடையே நிலவும் மௌனத்திற்கு என்ன வேலை தெரியுமா? - என்னை
உன்னை பற்றியே நினைக்கச் செய்வதும் - உன்னை
என்னை பற்றியே நினைக்காதது போல் நடிக்கச் செய்வதும் தான்.
மூடிய ஜன்னல் கதவுகளின் இடுக்குகள் வழியே குளிர் காற்று லேசாக ஊடுருவியபடி இருந்தது. குளிருக்கு ஏதுவாக அவள் தேனீர் கோப்பையை இரு கைகளிலும் அணைத்துப் பிடித்திருந்தாள். மழை இப்போது வலுத்து சத்தமாக பெய்யத் தொடங்கி இருந்தது. மழையின் சத்தத்தில், நான் அவளிடம் என்ன பேச வேண்டும் என்று யோசித்து வைத்திருந்தேனோ அவை யாவும் மனதிற்குள்ளாகவே கரைவது போல் இருந்தது. பழகாதவர்களிடம் கூட என்னால் சுலபமாய் பேசி விட முடிகிறது. ஆனால் பழகிய அவளிடம் தான் சொல்வதற்கு மிகவும் கடினமாக இருப்பதாக எனக்குப் பட்டது. என் முகத்தில் குழப்ப ரேகை ஓடுவதை அவள் கவனித்திருக்க்க் கூடும் என்று தோன்றியது. பிரச்சினை குறித்து முன்பாகவே அவள் யோசித்து முடித்திருக்கக் கூடும் என்பது அவளின் தெளிவான முகத்தை பார்த்து என்னால் யூகிக்க முடிந்தது. இருந்தாலும் யார் முதலில் மௌனத்தை உடைப்பது என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருந்தது.
கோப்பையைக் கீழே வைத்த போது அவளது வலது கையை என் இரு கைகளாலும் இறுக பற்றிக் கொண்டேன். அவள் தனது இடது கையை என் கைகளின் மீது வைத்துக் கொண்டாள். இருவரும் வார்த்தைகளை தொலைத்து விட்டிருந்தோம். ஏதும் பேசிக் கொள்ளவில்லை. எதுவும் பேச வேண்டும் என்று தோன்றவும் இல்லை.அவள் ஒரு சிறு குழந்தையை போல என் கை விரல்களை ஒவ்வொன்றாய் நீவி விட்ட படி இருந்தாள். இப்போது மழை நின்று போய் இருந்தது. இலைகளில் இருந்து துளிகள் வடிந்தபடி இருந்தன. ஓரிரு பூக்கள் லேசான காற்றில் சுற்றியபடி கீழே விழுந்து கொண்டிருந்தன. மண் வாசம் வீச ஆரம்பித்திருந்தது. மேல் திசையில் மேகங்களை விளக்கிக் கொண்டு சூரியன் தன் பொன் கிரணங்களை வீசத் தொடங்கி இருந்தது. தேங்கி கிடந்த நீரில் அவை ஒளிக்கோலங்களை போட்டுக் கொண்டு இருந்தது. என்றோ என் நாட்குறிப்பில் எழுதிய இரு வரிகளை மனக்கிடங்கில் இருந்து தோண்டி எடுத்தது மனது.
மௌனம்
சில நேரங்களில் சாதிக்கும்
சில நேரங்களில் சோதிக்கும்
எங்களின் மௌனத்தை எந்த வகையில் பொருத்துவது என்று புலப்படவில்லை. மௌனத்தின் இடைவெளியில் நடப்பவைகள் யாவும் ஒரு விதமான அசாதாரண சுழலை உண்டாக்கி விடுகிறது. மீண்டும் ஜன்னலின் வெளியே பார்த்தபடி இருந்தோம், கைகள் கோர்த்தபடி. மனமெங்கும் ஈரமேறிக் கிடப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. மழையின் மௌனத்தில் எங்களின் மௌனம் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டே இருந்தது.
Wednesday, October 14, 2009
வீடும் காதலும் - 2
முதல் பாகம் படிக்க இங்கே செல்லவும் - வீடும் காதலும் - 1
கடைசி இரண்டு குடித்தனங்கள் ஏழாவது வாசலுக்கு பிறகு இருக்கும். இந்த வீடுகளின் எதிரே மூன்று தூண்கள் நிற்கும். ஒரு தூணிற்கும் மற்றொன்றிற்கும் இடையே பத்தடி இடைவெளி இருக்கும். மேலிருக்கும் தகரத்தை தாங்குவதற்கு தான் இந்த தூண்கள் என்றாலும், தூண்களை சுற்றி விளையாடுவது எப்போதும் எங்களுக்கு பிடித்தமானது. இப்போதெல்லாம் தூண்கள் வைத்து யாரும் வீடு கட்டுவதாக தெரியவில்லை. ஒன்று கவனித்திருக்கிறேன் - தூண்கள் இருக்கும் வீடுகளில் குழந்தைகளின் குதூகலம் நிறைந்து இருக்கும். மாநகரங்களில் இருந்து ஆண்டு விடுமுறைக்கு ஒரே ஒரு முறை வரும் குழந்தைகள் கூட தூண்களை கண்டால் உடனே மகிழ்ச்சியுடன் விளையாட தயாராகி விடுவார்கள். தூண்கள் நமது எண்ணத்திற்கு ஏற்றாற் போன்று மாறும் தன்மையுடையவை என்று எனக்கு தோன்றுவது உண்டு. தனிமையில் தூண்களை பிடித்துக் கொண்டு யாரை நினைக்கிறோமோ அவர்களாகவே மாறும் தன்மை மனதிற்கு ஒரு வித மயக்கத்தை தருபவை. சில சமயங்களில் சற்று அபாயமானதும் கூட. என்னைப் பொறுத்த வரையில் மனதிற்கு நெருக்கமான நண்பர்களை போலத்தான் இந்த தூண்களும்.
எனக்கும் இந்த தூண்களுக்கும் இடையிலான உறவு அற்புதமானது. இன்றளவும் என் இடது நெற்றியில் காணப்படும் வடு இந்த தூண்களில் ஒன்றினால் ஏற்பட்டது தான். காயத்தின் காரணம் என்னுள் லேசான குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவது உண்டு. நந்தினியிடம் கூட அந்த காரணத்தை சொன்ன போது விழுந்து விழுந்து சிரித்தாள். நினைவு தெரியாத வயதில் இந்த வீட்டில் ஒரு குடும்பம் ஆந்திராவில் இருந்து வந்து குடியிருந்திருக்கிறது. அந்த குடும்பத்திலும் என் வயதையொத்த சிறுமி இருந்திருக்கிறாள். அவளை முத்தமிட துரத்தி சென்று தூணில் மோதிய போது ஏற்பட்டது தான் என் நெற்றியில் இன்னும் இருக்கும் விழுப்புண் என்று அம்மா அடிக்கடி சொல்லி இருக்கிறாள்.
தூண்களை பார்த்த பிறகு எனது மனவருத்தம் கூடிப்போனது. எங்கள் வீடு ஆறாவது மற்றும் ஏழாவது வாசலுக்கு இடையே அமைந்தது. எங்கள் குடித்தனம் இரண்டு அறைகள் கொண்டது. இரண்டு அறைகளுமே பத்தடி அகலமும், எட்டடி நீளமும் கொண்டவை தான். இந்த மிகச் சிறிய அறைகளில் தான் முதலில் ஐவரும் அப்பாவின் மறைவிற்கு பிறகு நால்வரும் காலம் தள்ளினோம். இரண்டு அறைகளையும் இணைப்பது ஒரு நடை மட்டுமே. நடையில் நன்றாக காற்று வரும். பின்னே உள்ள தோட்டத்திற்கும் குடித்தனங்களுக்கு செல்ல இந்த நடை ஒரே வழி என்பதால் அம்மா மதிய நேரத்தில் மட்டும் மின்சாரம் சேமிக்கும் பொருட்டு நடையில் படுத்து கொள்வதுண்டு. இரவில் சில சமயங்களில் தூக்கம் பிடிக்க வில்லை என்றால் அம்மாவும் நானும் நடையில் சென்று உறங்குவோம் அல்லது மாடிக்கு சென்று விடுவோம்.
சத்தம் கேட்காமல் நடையை தாண்டி மாடி செல்லும் படிகட்டுகளை அடைந்தேன். நந்தினி ஒரு போதும் இப்படி நடந்து கொள்பவள் இல்லை. அவள் அப்படி நடந்து கொள்ள நிச்சயம் ஏதேனும் காரணம் இருக்கும் என்று எண்ணியபடியே மாடிக்கு சென்றேன். முன்பு ஒரு முறை சைக்கிளில் அவளை வைத்து ஒரே ஒரு ரவுண்ட் அடிக்க வேண்டும் என்று சொன்ன போதும் நிறைய காரணங்கள் சொன்னாள். பிறகு அவளே ஒரு நாள் நான் எதிர்பாராத சமயத்தில் எனது சைக்கிளில் வந்து ஆச்சரியப்படுத்தினாள்.அதே போல இந்த முறையும் நடக்காதா என்று ஏங்க ஆரம்பித்தேன்.
மாடிக்கு செல்ல இரண்டு வழிகள் உண்டு. ஒன்று வீட்டின் உள்ளிருந்து செல்வதற்கும் மற்றொன்று வீட்டின் வெளியிலிருந்தே செல்வதற்கும் அமைக்கப்பட்டவை. உள்ளிருந்து செல்லும் வழியில் சென்றால் மாடியில் இருக்கும் இரண்டாவது குடித்தனத்திற்கே நேரே சென்று விடலாம். வெளியில் இருந்து செல்லும் வழியில் சென்றால் பால்கனி, விதானத்தின் ஜன்னல்கள், முதல் குடித்தனம் இவற்றை கடந்து தான் இரண்டாவது குடித்தனத்திற்கு வரவேண்டும். பால்கனியில் இருந்து பார்த்தால் வடக்கே காமாட்சி அம்மன் கோவிலும், வடமேற்கில் ஏகாம்பரேசுவரர் கோவிலும் தெரியும். பக்கத்து வீட்டு சுவரின் உதவியுடன் இரண்டாவது குடித்தனத்தின் தளத்தின் மீது ஏறினால் தான் கிழக்கில் இருக்கும் வரதராஜப்பெருமாள் கோவில் தெரியும்.
காஞ்சிபுரத்தில் உற்சவம் இல்லாத மாதங்களை தான் சீக்கிரம் எண்ணி விட முடியும். சித்திரையில் வரதராஜப்பெருமாள் கோவில் பிரம்மோத்சவம், மாசியில் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோத்சவம், பங்குனியில் ஏகாம்பரேசுவரர் கோவில் பிரம்மோத்சவம் என ஊரே ஒவ்வொரு மாதமும் களைகட்டும். வரதராஜப்பெருமாள் மட்டும் நாங்கள் இருந்த காமராஜர் வீதி வழியே பத்து நாட்களும் காலையில் ஒரு வாகனத்திலும் மாலையில் ஒரு வாகனத்திலும் செல்வார். மூன்றாம் நாள் கருட சேவையும், ஏழாம் நாள் தேர்த் திருவிழாவும் கூட்டம் ரொம்பி வழியும். தேரன்று மாடியில் நின்று கொண்டு தெற்கே மூங்கில் மண்டபத்தில் தேர் எங்கள் தெருவில் திரும்பும் முன்னரே அனைவரும் ஒன்று சேர்ந்து அரட்டை அடிக்க ஆரம்பித்து விடுவோம்.
மாடியின் இரண்டாவது குடித்தனத்தில் எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமான ஒரு பெரிய கூட்டுக்குடும்பம் இருந்தது. எங்களுக்கும் முன்பாகவே அந்த குடும்பம் செட்டியார் வீட்டில் குடியேறியது என்று அம்மா சொல்வாள். அந்த குடும்பத்தின் மங்கையர்க்கரசி பாட்டி கதை சொல்லியபடி அவளுடைய பேரப் பிள்ளைகளுக்கும், எனக்கும், என் இரு சகோதரர்களுக்கும் பௌர்ணமி இரவுகளில் உருண்டை சாதம் கொடுப்பாள்.சித்திரை மாதத்தில் மாலை நேரங்களில் பால்கனியில் தண்ணீர் ஊற்றி விடுவார்கள்.சித்திரை மாத நித்தி்ரைகள் யாவும் வானத்தில் நட்சத்திரங்களையும் நிலவையும் பார்த்தபடியே கழியும்.
சித்திரையில் வரும் பௌர்ணமியன்று வரதராஜப்பெருமாள் பாலாற்றில் இறங்குவது கள்ளழகர் வைகையில் இறங்குவது போல விசேஷமானது. சித்ரா பௌர்ணமி அன்று நடக்கும் அந்த விழா நடப்பாவி உத்சவம் என்று அழைக்கப் படுகிறது. ஊரில் இருக்கும் மக்கள் யாவரும் வித விதமான உணவுகளை தயாரித்து கொண்டு மாலை நடந்து சென்று பாலாற்றில் அமர்ந்து குடும்பம் குடும்பமாக மகிழ்ச்சியாக உண்டு விட்டு திரும்புவார்கள். எங்களைப் போல குடித்தனங்களில் இருப்பவர்கள் சித்ரா பௌர்ணமி அன்று ஆளுக்கு ஒரு வகையான சாதம் தயாரித்து கொண்டு வருவோம். எடுத்து செல்லும் உணவு வகைகள் ஒற்றைப் படையில் இருக்க வேண்டும் என்று செட்டியாரம்மா சொல்வாள். செட்டியாரம்மாவோ செட்டியாரோ இது வரை நடப்பாவிற்கு வந்தது இல்லை. இருந்தாலும் செட்டியாரம்மா செய்து தரும் ஓட்டை வடையும் நெய் பொங்கலும் எங்களுடன் வருடம் தவறாமல் வந்துவிடும். என் அம்மா ஸ்பெஷல் பருப்பு வடையும் புளியோதரையும். மேல் வீட்டில் இருக்கும் பாட்டி மாங்காய் சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் என்று கொண்டு வருவாள்.
[இப்போ இந்த கதையில வர நந்தினி என் காதலி இல்லை, பக்கத்து வீட்டு சின்ன பொன்னு தான்னு சொன்னா நம்பிடவா போறீங்க.]
மாடியில் இருந்து இறங்கி சைக்கிளை எடுத்துக் கொண்டு ராமகிருஷ்ண மடத்தில் இருக்கும் விவேகானந்தர் நூலகம் சென்றேன். நந்தினியை அங்கே வைத்து தான் முதலில் சந்தித்தது. உள்ளே நுழைந்ததுமே ஆச்சரியம் காத்திருந்தது. நந்தினியின் தோழி கல்யாணி "நந்தினி உனக்காக வரலாற்று நாவல்கள் இருக்கிற இடத்துல காத்துக்கிட்டு இருக்கா" என்று சொல்லிப் போனாள்.நூலகத்தின் மாடியில் ஒரமாக இருக்கும் வரலாற்று நாவல்கள் பகுதி. பேச வேண்டுமானால் அந்த இடம் தான் சரியாக இருக்கும். போனதும் கிடைத்தது நான் கேட்ட ஒற்றை முத்தம். அதிர்ச்சி தான் என்றாலும் மனம் ஆனந்த தாண்டவம் ஆடியது. என் கையில் ஒரு சிகப்பு ரோஜாவை திணித்து விட்டு வெட்கத்தை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்துக் கொண்டவள் ஒடியே போனாள். முத்தம் கிடைத்த மகிழ்ச்சியில் மனம் நெகிழ்ந்து போய் இருந்தது.
வழக்கம் போல சைக்கிளை இரண்டாவது வாசலில் நிறுத்தி விட்டு ஊஞ்சலை இடித்த படி ஒவ்வொரு வாசலாக கடந்து சென்று கொண்டே இருந்தேன். தூண்களை தொடுகையில் நந்தினியின் ஸ்பரிசம் உணர்ந்தேன். நேரே தோட்டத்திற்கு சென்றேன். பக்கத்து வீட்டு கொடுக்காப்புளி மரத்தில் கிளிகள் இரண்டு சிறகுகள் கோதிக் கொண்டிருந்தன. வண்ணத்துப்பூச்சிகள் இரண்டு அங்கும் இங்கும் காற்றில் அலைந்தபடி இருந்தது. தும்பிகள் புற்களின் மேல் தவமிருந்தன. மல்லிகை மொட்டுக்கள் பூப்பதற்கு நிலவின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தன. தேவலோகம் போல தோட்டம் எனக்குள் உருமாறிக் கொண்டிருந்தது. நானுன் என்னுடன் நந்தினியும் வான வீதியில் நடந்து கொண்டிருந்தோம் - பூலோகத்தில் இருக்கும் சொர்க்கத்தை(வீட்டை) பார்த்தபடி.
எனக்கும் இந்த தூண்களுக்கும் இடையிலான உறவு அற்புதமானது. இன்றளவும் என் இடது நெற்றியில் காணப்படும் வடு இந்த தூண்களில் ஒன்றினால் ஏற்பட்டது தான். காயத்தின் காரணம் என்னுள் லேசான குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவது உண்டு. நந்தினியிடம் கூட அந்த காரணத்தை சொன்ன போது விழுந்து விழுந்து சிரித்தாள். நினைவு தெரியாத வயதில் இந்த வீட்டில் ஒரு குடும்பம் ஆந்திராவில் இருந்து வந்து குடியிருந்திருக்கிறது. அந்த குடும்பத்திலும் என் வயதையொத்த சிறுமி இருந்திருக்கிறாள். அவளை முத்தமிட துரத்தி சென்று தூணில் மோதிய போது ஏற்பட்டது தான் என் நெற்றியில் இன்னும் இருக்கும் விழுப்புண் என்று அம்மா அடிக்கடி சொல்லி இருக்கிறாள்.
தூண்களை பார்த்த பிறகு எனது மனவருத்தம் கூடிப்போனது. எங்கள் வீடு ஆறாவது மற்றும் ஏழாவது வாசலுக்கு இடையே அமைந்தது. எங்கள் குடித்தனம் இரண்டு அறைகள் கொண்டது. இரண்டு அறைகளுமே பத்தடி அகலமும், எட்டடி நீளமும் கொண்டவை தான். இந்த மிகச் சிறிய அறைகளில் தான் முதலில் ஐவரும் அப்பாவின் மறைவிற்கு பிறகு நால்வரும் காலம் தள்ளினோம். இரண்டு அறைகளையும் இணைப்பது ஒரு நடை மட்டுமே. நடையில் நன்றாக காற்று வரும். பின்னே உள்ள தோட்டத்திற்கும் குடித்தனங்களுக்கு செல்ல இந்த நடை ஒரே வழி என்பதால் அம்மா மதிய நேரத்தில் மட்டும் மின்சாரம் சேமிக்கும் பொருட்டு நடையில் படுத்து கொள்வதுண்டு. இரவில் சில சமயங்களில் தூக்கம் பிடிக்க வில்லை என்றால் அம்மாவும் நானும் நடையில் சென்று உறங்குவோம் அல்லது மாடிக்கு சென்று விடுவோம்.
சத்தம் கேட்காமல் நடையை தாண்டி மாடி செல்லும் படிகட்டுகளை அடைந்தேன். நந்தினி ஒரு போதும் இப்படி நடந்து கொள்பவள் இல்லை. அவள் அப்படி நடந்து கொள்ள நிச்சயம் ஏதேனும் காரணம் இருக்கும் என்று எண்ணியபடியே மாடிக்கு சென்றேன். முன்பு ஒரு முறை சைக்கிளில் அவளை வைத்து ஒரே ஒரு ரவுண்ட் அடிக்க வேண்டும் என்று சொன்ன போதும் நிறைய காரணங்கள் சொன்னாள். பிறகு அவளே ஒரு நாள் நான் எதிர்பாராத சமயத்தில் எனது சைக்கிளில் வந்து ஆச்சரியப்படுத்தினாள்.அதே போல இந்த முறையும் நடக்காதா என்று ஏங்க ஆரம்பித்தேன்.
மாடிக்கு செல்ல இரண்டு வழிகள் உண்டு. ஒன்று வீட்டின் உள்ளிருந்து செல்வதற்கும் மற்றொன்று வீட்டின் வெளியிலிருந்தே செல்வதற்கும் அமைக்கப்பட்டவை. உள்ளிருந்து செல்லும் வழியில் சென்றால் மாடியில் இருக்கும் இரண்டாவது குடித்தனத்திற்கே நேரே சென்று விடலாம். வெளியில் இருந்து செல்லும் வழியில் சென்றால் பால்கனி, விதானத்தின் ஜன்னல்கள், முதல் குடித்தனம் இவற்றை கடந்து தான் இரண்டாவது குடித்தனத்திற்கு வரவேண்டும். பால்கனியில் இருந்து பார்த்தால் வடக்கே காமாட்சி அம்மன் கோவிலும், வடமேற்கில் ஏகாம்பரேசுவரர் கோவிலும் தெரியும். பக்கத்து வீட்டு சுவரின் உதவியுடன் இரண்டாவது குடித்தனத்தின் தளத்தின் மீது ஏறினால் தான் கிழக்கில் இருக்கும் வரதராஜப்பெருமாள் கோவில் தெரியும்.
காஞ்சிபுரத்தில் உற்சவம் இல்லாத மாதங்களை தான் சீக்கிரம் எண்ணி விட முடியும். சித்திரையில் வரதராஜப்பெருமாள் கோவில் பிரம்மோத்சவம், மாசியில் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோத்சவம், பங்குனியில் ஏகாம்பரேசுவரர் கோவில் பிரம்மோத்சவம் என ஊரே ஒவ்வொரு மாதமும் களைகட்டும். வரதராஜப்பெருமாள் மட்டும் நாங்கள் இருந்த காமராஜர் வீதி வழியே பத்து நாட்களும் காலையில் ஒரு வாகனத்திலும் மாலையில் ஒரு வாகனத்திலும் செல்வார். மூன்றாம் நாள் கருட சேவையும், ஏழாம் நாள் தேர்த் திருவிழாவும் கூட்டம் ரொம்பி வழியும். தேரன்று மாடியில் நின்று கொண்டு தெற்கே மூங்கில் மண்டபத்தில் தேர் எங்கள் தெருவில் திரும்பும் முன்னரே அனைவரும் ஒன்று சேர்ந்து அரட்டை அடிக்க ஆரம்பித்து விடுவோம்.
மாடியின் இரண்டாவது குடித்தனத்தில் எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமான ஒரு பெரிய கூட்டுக்குடும்பம் இருந்தது. எங்களுக்கும் முன்பாகவே அந்த குடும்பம் செட்டியார் வீட்டில் குடியேறியது என்று அம்மா சொல்வாள். அந்த குடும்பத்தின் மங்கையர்க்கரசி பாட்டி கதை சொல்லியபடி அவளுடைய பேரப் பிள்ளைகளுக்கும், எனக்கும், என் இரு சகோதரர்களுக்கும் பௌர்ணமி இரவுகளில் உருண்டை சாதம் கொடுப்பாள்.சித்திரை மாதத்தில் மாலை நேரங்களில் பால்கனியில் தண்ணீர் ஊற்றி விடுவார்கள்.சித்திரை மாத நித்தி்ரைகள் யாவும் வானத்தில் நட்சத்திரங்களையும் நிலவையும் பார்த்தபடியே கழியும்.
சித்திரையில் வரும் பௌர்ணமியன்று வரதராஜப்பெருமாள் பாலாற்றில் இறங்குவது கள்ளழகர் வைகையில் இறங்குவது போல விசேஷமானது. சித்ரா பௌர்ணமி அன்று நடக்கும் அந்த விழா நடப்பாவி உத்சவம் என்று அழைக்கப் படுகிறது. ஊரில் இருக்கும் மக்கள் யாவரும் வித விதமான உணவுகளை தயாரித்து கொண்டு மாலை நடந்து சென்று பாலாற்றில் அமர்ந்து குடும்பம் குடும்பமாக மகிழ்ச்சியாக உண்டு விட்டு திரும்புவார்கள். எங்களைப் போல குடித்தனங்களில் இருப்பவர்கள் சித்ரா பௌர்ணமி அன்று ஆளுக்கு ஒரு வகையான சாதம் தயாரித்து கொண்டு வருவோம். எடுத்து செல்லும் உணவு வகைகள் ஒற்றைப் படையில் இருக்க வேண்டும் என்று செட்டியாரம்மா சொல்வாள். செட்டியாரம்மாவோ செட்டியாரோ இது வரை நடப்பாவிற்கு வந்தது இல்லை. இருந்தாலும் செட்டியாரம்மா செய்து தரும் ஓட்டை வடையும் நெய் பொங்கலும் எங்களுடன் வருடம் தவறாமல் வந்துவிடும். என் அம்மா ஸ்பெஷல் பருப்பு வடையும் புளியோதரையும். மேல் வீட்டில் இருக்கும் பாட்டி மாங்காய் சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் என்று கொண்டு வருவாள்.
[இப்போ இந்த கதையில வர நந்தினி என் காதலி இல்லை, பக்கத்து வீட்டு சின்ன பொன்னு தான்னு சொன்னா நம்பிடவா போறீங்க.]
மாடியில் இருந்து இறங்கி சைக்கிளை எடுத்துக் கொண்டு ராமகிருஷ்ண மடத்தில் இருக்கும் விவேகானந்தர் நூலகம் சென்றேன். நந்தினியை அங்கே வைத்து தான் முதலில் சந்தித்தது. உள்ளே நுழைந்ததுமே ஆச்சரியம் காத்திருந்தது. நந்தினியின் தோழி கல்யாணி "நந்தினி உனக்காக வரலாற்று நாவல்கள் இருக்கிற இடத்துல காத்துக்கிட்டு இருக்கா" என்று சொல்லிப் போனாள்.நூலகத்தின் மாடியில் ஒரமாக இருக்கும் வரலாற்று நாவல்கள் பகுதி. பேச வேண்டுமானால் அந்த இடம் தான் சரியாக இருக்கும். போனதும் கிடைத்தது நான் கேட்ட ஒற்றை முத்தம். அதிர்ச்சி தான் என்றாலும் மனம் ஆனந்த தாண்டவம் ஆடியது. என் கையில் ஒரு சிகப்பு ரோஜாவை திணித்து விட்டு வெட்கத்தை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்துக் கொண்டவள் ஒடியே போனாள். முத்தம் கிடைத்த மகிழ்ச்சியில் மனம் நெகிழ்ந்து போய் இருந்தது.
வழக்கம் போல சைக்கிளை இரண்டாவது வாசலில் நிறுத்தி விட்டு ஊஞ்சலை இடித்த படி ஒவ்வொரு வாசலாக கடந்து சென்று கொண்டே இருந்தேன். தூண்களை தொடுகையில் நந்தினியின் ஸ்பரிசம் உணர்ந்தேன். நேரே தோட்டத்திற்கு சென்றேன். பக்கத்து வீட்டு கொடுக்காப்புளி மரத்தில் கிளிகள் இரண்டு சிறகுகள் கோதிக் கொண்டிருந்தன. வண்ணத்துப்பூச்சிகள் இரண்டு அங்கும் இங்கும் காற்றில் அலைந்தபடி இருந்தது. தும்பிகள் புற்களின் மேல் தவமிருந்தன. மல்லிகை மொட்டுக்கள் பூப்பதற்கு நிலவின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தன. தேவலோகம் போல தோட்டம் எனக்குள் உருமாறிக் கொண்டிருந்தது. நானுன் என்னுடன் நந்தினியும் வான வீதியில் நடந்து கொண்டிருந்தோம் - பூலோகத்தில் இருக்கும் சொர்க்கத்தை(வீட்டை) பார்த்தபடி.
வீடும் காதலும் - 1
காஞ்சிபுரத்தில் வீடுகள் கொஞ்சம் நீளமாகவே இருக்கும். நாங்கள் வாடகைக்கு குடியிருந்த வீட்டில் மொத்தம் ஆறு குடித்தனங்கள். மாடியில் இரண்டும் கீழே நான்கும் என குடியிருந்தோம். மொத்தம் பத்து வாசற்கட்டுகளை கடந்தால் தான் தோட்டம் வரும். முதல் இரண்டு வாசல்களுக்கு இடையில் சிறு வராண்டாக்கள் இருக்கும். இங்கே தான் சைக்கிள்களை நிறுத்தி வைத்திருப்போம். இரண்டாவது வாசற்படியில் உள்ள கதவை சாத்துவது சற்றே கடினம். மிகப் பெரிய தேக்கு மரத்தினாலான கதவு அது. கலை நயமிக்க வேலைப்பாடுகள் அமைந்த அந்த கதவின் இரு புறமும் விளக்கு வைக்க மாடங்கள் உண்டு. மார்கழி மாதத்தில் நாள் தவறாமல் காலையும் மாலையும் விளக்கு வைக்க சொல்வாள் செட்டியாரம்மா. கார்த்திகை மாதத்தில் மாலை மட்டும் விளக்கு வைக்க சொல்வாள். கதவிற்கு மேல கண்ணாடி போட்ட கஜலக்ஷ்மி படமும் அதற்கும் சற்று மேல சங்கு, திருநாமம், சக்கரம் கொண்ட படமும் பதிக்கப்பட்டு இருக்கும். தினமும் காலையில் செட்டியார் இங்கு வரை வந்து ஊதுவத்தி காட்டுவது வழக்கம். மூன்றாவது வாசலை ஒட்டி ஒரு சிறு தாழ்வாரம் இருக்கும். சற்றே பெரிதான டிவீஎஸ் போன்ற வண்டிகளை நிறுத்துவதற்கான இடம் அது.
மூன்றாவது மற்றும் நான்காவது வாசல்களுக்கு இடையே ஒரு பெரிய முற்றம். விதானம் உயர்த்தப்பட்டு சுற்றிலும் ஜன்னல்கள் வைத்து தேக்குமர வேலைப்பாடுகளுடன் பார்க்கவே அற்புதமாய் இருக்கும். ஜன்னல்களுக்கு சற்றே கீழே உட்கார்ந்தவாறு காந்தி சிரித்தபடி நூல் ராட்டை சுற்றி கொண்டிருப்பார். விடுதலைக்கு முந்திய சந்ததியினர் இருக்கும் பெரும்பான்மையான வீடுகளில் காந்தி இன்றும் புகைப்படத்திலாவது இருக்கிறார் என்பது ஆறுதல்.காந்தி ஜெயந்தியின் போது செட்டியார் யாரைக் கொண்டாவது அந்த புகைப்படத்தை துடைத்து பஞ்சினால் தானே திரித்த ஒரு பெரிய மாலையை அதற்கு அணிவிக்க வைப்பார்.
அட சொல்ல மறந்துட்டேனே. இங்கே தான் அழகான ஊஞ்சல் ஒன்றும் இருக்கும். இந்த ஊஞ்சலில் ஆடுவதற்கு இந்த வீட்டில் குடி இருக்கும் அத்தனை பேரும் விருப்பப்படுவார்கள். அதுவும் செட்டியாரும் செட்டியாரம்மாவும் இல்லாத நேரம் என்றால் கேட்கவே வேண்டாம். உயர்ந்த விதானத்தில் இருந்து பத்தடி கிழிறக்கி ஒரு மின்விசிறி உண்டு. காற்று வருவதற்கு ஏதுவாக அமைக்கப் பட்டது. அதை ஊஞ்சலில் உட்கார்ந்தபடி கைகளால் தொட்டு விடும் அளவுக்கு ஆடுவோம். தேக்கு மரத்தினாலான இந்த ஊஞ்சல் மிகவும் அழகானது. நன்றாக செதுக்கப்பட்டு வார்னிஷ் அடித்து வைத்திருப்பார்கள். இரும்பு சங்கிலிகள் கொண்டு கீழ் முற்றத்தின் கட்டை ஒன்றில் தொங்கவிட்டிருப்பார்கள். சங்கிலிகளின் முடிவில் மணிகள் கட்டப்பட்டிருக்கும். யாரும் ஊஞ்சலில் வந்தமர்ந்தாலே ஒலி எழுப்பும். புதிதாக வீட்டிற்கு வருபவர்கள் தெரியாமல் ஊஞ்சலை லேசாக இடித்தவாறு சென்றால் உடனே செட்டியாரம்மா முற்றத்தின் இடப்பக்கத்தில் இருக்கும் சமையற்கட்டில் இருந்து கொண்டே யாரது என்று குரல் கொடுப்பாள்.
மற்ற வாசல்களையும் வேகமாக கடந்து நேராக தோட்டத்தின் கதவை திறந்தேன்.மனதில் கோபம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அப்படியென்ன கேட்டு விட்டேன் நான். இருந்தாலும் நந்தினிக்கு கொஞ்சம் திமிரு தான் என்று எண்ணிக்கொண்டே கதவை லேசாக சாற்றி விட்டு தோட்டத்திற்குள் நுழைந்தேன். யார் வேண்டுமானால் எப்போதும் வரலாம் என்பதால் தான் இந்த எச்சரிக்கை. சிலருக்கு படிக்கும் போது பாட்டு கேட்பது, தலையை உலைப்பது, நகங்களை கடிப்பது போல எனக்கு படிக்கும் போது தோட்டத்தில் அணிலோ, கிளிகளோ, மைனாக்களோ அல்லது சிட்டுக்குருவிகள், தவிட்டுக்குருவிகளோ கத்திக் கொண்டிருந்தால் நன்றாக இருப்பதாக தோன்றும். பெரும்பான்மையான என் பொழுதுகள் இந்த தோட்டத்தில் தான் கழியும். மனதிற்கு மிகவும் நெருக்கமான இடம் இது. நான் எப்போது கோபம் கொண்டாலும் தோட்டத்தில் சிறிது நேரம் இருந்தால் கொஞ்சம் அமைதி ஆகிவிடுவது வழக்கம்.
தோட்டம் சிறிது தான் என்றாலும் நாங்கள் கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு இடம் உண்டு. பவுண்டரி லைன் தான் கொஞ்சம் கிட்டக்கவே இருக்கும். நேராக பின் மதில் சுவரில் பட்டால் சிக்ஸ். ஒரு முறை தரையில் அடித்தோ அல்லது உருண்டோ சென்று சுவரில் பட்டால் ஃபோர். தோட்டம் என்றால் பூச்செடிகளும் மரங்களும் இல்லாமல் இருக்குமா என்ன? முன்னாடியே நிற்கும் முருங்கை மரத்திலோ அல்லது வாழை மரத்திலோ அல்லது டிசம்பர் பூச்செடியிலோ பட்டால் ஜி1. அடுக்கு மல்லி அல்லது செம்பருத்தி பூச்செடியிலோ தென்னை அல்லது எலுமிச்சை மரத்திலோ பட்டு நின்றால் ஜி2. சில மாலை வேளைகளில் நேரம் தெரியாமல் விளையாடுவோம். அப்போதெல்லாம் இந்த அடுக்கு மல்லியின் வாசம் தான் எங்களுக்கு மணியாகிவிட்டதை சொல்லும். அதன் வாசம் ஆளையே தூக்கும். மொத்தமாய் ஃ எழுத்தை போல மூன்று கும்பல்களாக அடுக்கு மல்லி செடிகள் அடர்ந்திருக்கும். அந்த பூக்களை பறிப்பதற்கு குடியிருப்பவர்களிடையே போட்டாப்போட்டி நிலவும்.
எலுமிச்சை மரம் அடுக்குமல்லிகளின் முடிவில் சற்றே வலதுபுறம் கிளை பரப்பி நிற்கும். அதிலிருந்து இரண்டடி தூரத்தில் ஓங்கி வளர்ந்திருக்கும் தென்னை மரம். தென்னை மரத்திற்கு அப்பால் நான்கடி தூரத்தில் பின் மதில் சுவர். எங்கள் பவுண்டரி லைன். எனது பெரிய அண்ணன் சில சமயம் சுவரை தொடமால் நின்று சிக்ஸ் செல்லும் பந்துகளை லாவகமாக பிடித்து விடுவான். அவன் பவுண்டரி லைனில் நின்றால் நாங்கள் அடிப்பது வெறும் ஜி1 இல்லை என்றால் ஜி2 தான். தென்னை மரத்திற்கும் பின் மதில் சுவருக்கும் இடையே பெயர் தெரியாத நிறைய செடிகொடிகள் அடர்ந்து கிடக்கும். முசுமுசு கொடி, கோவை கொடி, ஒரு வகையான பருப்புக்கீரை, மஞ்சள் பூப்பூக்கும் ஒரு கொடி, ஊதா நிறத்தில் பூப்பூக்கும் ஒரு செடி என நிறைய உண்டு.
ஈசிச்சேர் எடுத்துக்கொண்டு போய் எலுமிச்சை மரத்தின் அடியில் போட்டேன். அதில் சாய்ந்து கொண்டு நீலவானத்தில் நகர்ந்து செல்லும் மேகங்களை பார்த்தபடி இருந்தேன். மனதில் எண்ணவோட்டங்கள் ஆரம்பித்தன. எங்கெங்கோ எண்ணம் போயும் வந்தும் கொண்டிருந்தது. "ஒன்னு தானே கேட்டேன் அவகிட்டே அதுக்கு ஏன் இப்படி" - சமாதானம் செய்ய முயற்சித்து நானே தோற்று கொண்டிருந்தேன். கோபத்தில் கண்களில் கண்ணீர் வழிந்தோட ஆரம்பித்திருந்தது.
பக்கத்து வீட்டில் இருக்கும் கொடுக்காப்புளி மரத்தில் கிளிகள் இரண்டு ஒரு பழத்திற்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தன. எலுமிச்சை மரத்தின் இன்னொரு முனையில் இருந்து அணில் ஒன்று கிரீச் கிரீச் என்று கத்தி கொண்டிருந்தது. எப்போது வேண்டுமானாலும் நான் எழுந்திருக்க கூடும் என்று தென்னை மரத்திற்கு தாவ ஏதுவாக அமர்ந்து கொண்டு வாலை தூக்கித் தூக்கி கத்திக் கொண்டிருந்தது. மதில் சுவரின் பின்னால் இருக்கும் சத்திரத்தின் சுவரில் பூனை ஒன்று போய்க்கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் பக்கத்து வீட்டின் கடைசியில் இருக்கும் வேப்பமரத்தில் இருந்து கொண்டு இந்த தவிட்டுக்குருவிகள் இத்தனை கூப்பாடு போடாது. தோட்டத்தின் இரு புற சுவர்களின் நடுவே துணி காயப்போடும் கொடி கம்பிகள் குறுக்கும் நெடுக்குமாக கட்டப்பட்டிருக்கும். எப்போது வேண்டுமானாலும் யாரும் வரலாம் என்ற எச்சரிக்கையோடு தனிச்சையாக கைகள் கண்ணீரை துடைத்தபடி இருந்தன.
"சொத்" என்ற சப்தம் கேட்டதும் தான் மீண்டும் தோட்டத்திற்கு வந்தேன். ஒரு வேளை குரங்கு தான் தென்னை மரத்தில் இருந்து எதையும் போடுகிறதோ என்று யோசித்தேன். நல்லவேளை இல்லை. ஒரு பழுத்த எலுமிச்சை தான் சற்று தூரத்தில் விழுந்திருந்தது. வாரத்தில் நான்கு நாட்களாவது குரங்கு பட்டாளம் வந்து விடும். வாழை மரங்களின் குருத்தையும் இளநீரையும் ஒரு கை பார்த்துவிட்டு பக்கத்து வீட்டு வேப்பமர நிழலிலோ சத்திரத்தின் உயர்நிலை தண்ணீர் தொட்டியின் கீழோ இளைப்பாறிவிட்டு செல்லும். சில சமயங்களில் வீட்டிற்குள்ளும் வந்து விடுவதுண்டு.
அடர்த்தியான எலுமிச்சை இலைகளையும் தாண்டி ஆங்காங்கே சூரியன் என்னை சுட்டுக்கொண்டிருந்தது. அதுவரை சுட்டதாக தெரியவில்லையே என்று யோசித்தபடி இருந்தேன். கன்னங்களில் கண்ணீர் காய்ந்து கறையாகி இருந்தது. ஈசிச்சேரில் இருந்து எழுந்து அதை மடித்து வைத்தேன். பாரம் குறைந்தது போல் இருந்தது. மெதுவாக குழாயடி நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அழுதது தெரியாமல் இருக்க கை, கால், முகம் கழுவிக் கொண்டு உள்ளே சென்றேன். தோட்டக்கதவை சாத்திக்கொண்டு உள்ளே வந்தேன்.
வலது புறம் கிணறும் கீழே குடியிருக்கும் வீடுகளின் நீர் பயன்பாட்டிற்கான தொட்டியும் உண்டு. இடது புறம் வரிசையாக குளியலறைகள். ஒரு காலத்தில் பட்டு நெசவுக்காக சாயமேற்ற கட்டப்பட்ட சின்ன சின்ன தொட்டிகளும், மாட்டுகொட்டகைக்கு ஏற்ப இரும்பு வளையங்களும் அங்கங்கே இருக்கும். கிணற்றில் நீர் இருந்தாலும் இறைப்பது கிடையாது. போர் போட்டு மோட்டார் வைத்து தான் கீழே உள்ள தொட்டிக்கும், மேலே இருக்கும் விடுகளின் நீர் பயன்பாட்டிற்கான மேல்தொட்டிக்கும் தண்ணீர் ஏற்றுவார்கள். மோட்டார் போடும் சுவிட்ச் எங்கள் வீட்டின் எதிரில் தான் இருக்கும்.
சில சமயம் ஐஸ் பாய் விளையாடும் போது கிணற்றுக்குள் அல்லது தொட்டிக்குள் கூட ஒளிந்து கொள்வதுண்டு. கீழே இருந்த குடித்தனங்களில் எட்டு பேர் நாங்கள் ஐஸ் பாய் விளையாடுவோம். பொடிசுகளை ஒப்புக்கு சப்பான் என்று சொல்லி கண்ணை மூடி கொள்பவரின் பின்னாலே நிறுத்தி விடுவோம். தோட்டத்தில் இருந்து உள்ளே வந்த பிறகு முகம் கழுவி ஏழு மணி வரை படிப்பது போல் இருந்து விட்டு ஐஸ் பாய் விளையாட ஆரம்பிப்போம். எட்டரை மணிக்கு செய்திகள் போடும் போது தான் சாப்பிட போவதாக விளையாட்டை நிறுத்துவோம். ஏழாவது கட்டில் இருந்து தோட்டத்தின் கதவு வரை தகரம் வேய்ந்த இரண்டு குடித்தனங்கள் தான். கொஞ்சம் இருட்டாக இருக்கும். எங்கு வேண்டுமானாலும் ஒளிந்து கொள்ளலாம். சில சமயம் தகரத்தின் மீது கூட ஏறிக்கொள்வோம்.
தகரத்தின் மீது ஏற ஏதுவாக குளியலறைகளை ஒட்டி இரண்டடி முன்னால் சிறு திண்ணையும் அதையொட்டி துளசி மாடமும் இருக்கும். தினமும் காலையில் செட்டியாரம்மா வெள்ளி விளக்கு மற்றும் வெள்ளி பூஜை சாமான்களுடன் துளசி மாடத்திற்கு வருவாள். பூஜை முடிந்து எங்கள் வீட்டு வாசலை கடக்கும் போது நெய்வேத்தியத்திற்கு கொண்டு வந்த கற்கண்டையோ, பேரீச்சம் பழத்தையோ அல்லது குல்கந்தையோ (ரோஜா இதழ், தேன், கற்கண்டு கலந்து தயாரிக்கப்படுவது - எனக்கு தெரிந்தவரை) என்னைக் கூப்பிட்டு கொடுத்து விட்டு செல்வாள்.
இன்னமும் என் மனது நந்தினி சொன்ன வார்த்தைகளையே அசைப் போட்டுக்கொண்டிருந்தது. அத்தனை எளிதாக எப்படி அவளால் சொல்லிவிட முடிந்தது என்று யோசித்து யோசித்து களைத்துப் போனேன். இருந்தாலும் நான் அவளிடம் கேட்டிருக்க கூடாதோ என்றும் மறுபுறம் தோன்றியது. ஆசை உள்ளவர்கள் யாரும் கேட்பது தானே என்று எனக்கு நானே சமாதானம் அடைய முயற்சித்தேன்.
மூன்றாவது மற்றும் நான்காவது வாசல்களுக்கு இடையே ஒரு பெரிய முற்றம். விதானம் உயர்த்தப்பட்டு சுற்றிலும் ஜன்னல்கள் வைத்து தேக்குமர வேலைப்பாடுகளுடன் பார்க்கவே அற்புதமாய் இருக்கும். ஜன்னல்களுக்கு சற்றே கீழே உட்கார்ந்தவாறு காந்தி சிரித்தபடி நூல் ராட்டை சுற்றி கொண்டிருப்பார். விடுதலைக்கு முந்திய சந்ததியினர் இருக்கும் பெரும்பான்மையான வீடுகளில் காந்தி இன்றும் புகைப்படத்திலாவது இருக்கிறார் என்பது ஆறுதல்.காந்தி ஜெயந்தியின் போது செட்டியார் யாரைக் கொண்டாவது அந்த புகைப்படத்தை துடைத்து பஞ்சினால் தானே திரித்த ஒரு பெரிய மாலையை அதற்கு அணிவிக்க வைப்பார்.
அட சொல்ல மறந்துட்டேனே. இங்கே தான் அழகான ஊஞ்சல் ஒன்றும் இருக்கும். இந்த ஊஞ்சலில் ஆடுவதற்கு இந்த வீட்டில் குடி இருக்கும் அத்தனை பேரும் விருப்பப்படுவார்கள். அதுவும் செட்டியாரும் செட்டியாரம்மாவும் இல்லாத நேரம் என்றால் கேட்கவே வேண்டாம். உயர்ந்த விதானத்தில் இருந்து பத்தடி கிழிறக்கி ஒரு மின்விசிறி உண்டு. காற்று வருவதற்கு ஏதுவாக அமைக்கப் பட்டது. அதை ஊஞ்சலில் உட்கார்ந்தபடி கைகளால் தொட்டு விடும் அளவுக்கு ஆடுவோம். தேக்கு மரத்தினாலான இந்த ஊஞ்சல் மிகவும் அழகானது. நன்றாக செதுக்கப்பட்டு வார்னிஷ் அடித்து வைத்திருப்பார்கள். இரும்பு சங்கிலிகள் கொண்டு கீழ் முற்றத்தின் கட்டை ஒன்றில் தொங்கவிட்டிருப்பார்கள். சங்கிலிகளின் முடிவில் மணிகள் கட்டப்பட்டிருக்கும். யாரும் ஊஞ்சலில் வந்தமர்ந்தாலே ஒலி எழுப்பும். புதிதாக வீட்டிற்கு வருபவர்கள் தெரியாமல் ஊஞ்சலை லேசாக இடித்தவாறு சென்றால் உடனே செட்டியாரம்மா முற்றத்தின் இடப்பக்கத்தில் இருக்கும் சமையற்கட்டில் இருந்து கொண்டே யாரது என்று குரல் கொடுப்பாள்.
மற்ற வாசல்களையும் வேகமாக கடந்து நேராக தோட்டத்தின் கதவை திறந்தேன்.மனதில் கோபம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அப்படியென்ன கேட்டு விட்டேன் நான். இருந்தாலும் நந்தினிக்கு கொஞ்சம் திமிரு தான் என்று எண்ணிக்கொண்டே கதவை லேசாக சாற்றி விட்டு தோட்டத்திற்குள் நுழைந்தேன். யார் வேண்டுமானால் எப்போதும் வரலாம் என்பதால் தான் இந்த எச்சரிக்கை. சிலருக்கு படிக்கும் போது பாட்டு கேட்பது, தலையை உலைப்பது, நகங்களை கடிப்பது போல எனக்கு படிக்கும் போது தோட்டத்தில் அணிலோ, கிளிகளோ, மைனாக்களோ அல்லது சிட்டுக்குருவிகள், தவிட்டுக்குருவிகளோ கத்திக் கொண்டிருந்தால் நன்றாக இருப்பதாக தோன்றும். பெரும்பான்மையான என் பொழுதுகள் இந்த தோட்டத்தில் தான் கழியும். மனதிற்கு மிகவும் நெருக்கமான இடம் இது. நான் எப்போது கோபம் கொண்டாலும் தோட்டத்தில் சிறிது நேரம் இருந்தால் கொஞ்சம் அமைதி ஆகிவிடுவது வழக்கம்.
தோட்டம் சிறிது தான் என்றாலும் நாங்கள் கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு இடம் உண்டு. பவுண்டரி லைன் தான் கொஞ்சம் கிட்டக்கவே இருக்கும். நேராக பின் மதில் சுவரில் பட்டால் சிக்ஸ். ஒரு முறை தரையில் அடித்தோ அல்லது உருண்டோ சென்று சுவரில் பட்டால் ஃபோர். தோட்டம் என்றால் பூச்செடிகளும் மரங்களும் இல்லாமல் இருக்குமா என்ன? முன்னாடியே நிற்கும் முருங்கை மரத்திலோ அல்லது வாழை மரத்திலோ அல்லது டிசம்பர் பூச்செடியிலோ பட்டால் ஜி1. அடுக்கு மல்லி அல்லது செம்பருத்தி பூச்செடியிலோ தென்னை அல்லது எலுமிச்சை மரத்திலோ பட்டு நின்றால் ஜி2. சில மாலை வேளைகளில் நேரம் தெரியாமல் விளையாடுவோம். அப்போதெல்லாம் இந்த அடுக்கு மல்லியின் வாசம் தான் எங்களுக்கு மணியாகிவிட்டதை சொல்லும். அதன் வாசம் ஆளையே தூக்கும். மொத்தமாய் ஃ எழுத்தை போல மூன்று கும்பல்களாக அடுக்கு மல்லி செடிகள் அடர்ந்திருக்கும். அந்த பூக்களை பறிப்பதற்கு குடியிருப்பவர்களிடையே போட்டாப்போட்டி நிலவும்.
எலுமிச்சை மரம் அடுக்குமல்லிகளின் முடிவில் சற்றே வலதுபுறம் கிளை பரப்பி நிற்கும். அதிலிருந்து இரண்டடி தூரத்தில் ஓங்கி வளர்ந்திருக்கும் தென்னை மரம். தென்னை மரத்திற்கு அப்பால் நான்கடி தூரத்தில் பின் மதில் சுவர். எங்கள் பவுண்டரி லைன். எனது பெரிய அண்ணன் சில சமயம் சுவரை தொடமால் நின்று சிக்ஸ் செல்லும் பந்துகளை லாவகமாக பிடித்து விடுவான். அவன் பவுண்டரி லைனில் நின்றால் நாங்கள் அடிப்பது வெறும் ஜி1 இல்லை என்றால் ஜி2 தான். தென்னை மரத்திற்கும் பின் மதில் சுவருக்கும் இடையே பெயர் தெரியாத நிறைய செடிகொடிகள் அடர்ந்து கிடக்கும். முசுமுசு கொடி, கோவை கொடி, ஒரு வகையான பருப்புக்கீரை, மஞ்சள் பூப்பூக்கும் ஒரு கொடி, ஊதா நிறத்தில் பூப்பூக்கும் ஒரு செடி என நிறைய உண்டு.
ஈசிச்சேர் எடுத்துக்கொண்டு போய் எலுமிச்சை மரத்தின் அடியில் போட்டேன். அதில் சாய்ந்து கொண்டு நீலவானத்தில் நகர்ந்து செல்லும் மேகங்களை பார்த்தபடி இருந்தேன். மனதில் எண்ணவோட்டங்கள் ஆரம்பித்தன. எங்கெங்கோ எண்ணம் போயும் வந்தும் கொண்டிருந்தது. "ஒன்னு தானே கேட்டேன் அவகிட்டே அதுக்கு ஏன் இப்படி" - சமாதானம் செய்ய முயற்சித்து நானே தோற்று கொண்டிருந்தேன். கோபத்தில் கண்களில் கண்ணீர் வழிந்தோட ஆரம்பித்திருந்தது.
பக்கத்து வீட்டில் இருக்கும் கொடுக்காப்புளி மரத்தில் கிளிகள் இரண்டு ஒரு பழத்திற்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தன. எலுமிச்சை மரத்தின் இன்னொரு முனையில் இருந்து அணில் ஒன்று கிரீச் கிரீச் என்று கத்தி கொண்டிருந்தது. எப்போது வேண்டுமானாலும் நான் எழுந்திருக்க கூடும் என்று தென்னை மரத்திற்கு தாவ ஏதுவாக அமர்ந்து கொண்டு வாலை தூக்கித் தூக்கி கத்திக் கொண்டிருந்தது. மதில் சுவரின் பின்னால் இருக்கும் சத்திரத்தின் சுவரில் பூனை ஒன்று போய்க்கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் பக்கத்து வீட்டின் கடைசியில் இருக்கும் வேப்பமரத்தில் இருந்து கொண்டு இந்த தவிட்டுக்குருவிகள் இத்தனை கூப்பாடு போடாது. தோட்டத்தின் இரு புற சுவர்களின் நடுவே துணி காயப்போடும் கொடி கம்பிகள் குறுக்கும் நெடுக்குமாக கட்டப்பட்டிருக்கும். எப்போது வேண்டுமானாலும் யாரும் வரலாம் என்ற எச்சரிக்கையோடு தனிச்சையாக கைகள் கண்ணீரை துடைத்தபடி இருந்தன.
"சொத்" என்ற சப்தம் கேட்டதும் தான் மீண்டும் தோட்டத்திற்கு வந்தேன். ஒரு வேளை குரங்கு தான் தென்னை மரத்தில் இருந்து எதையும் போடுகிறதோ என்று யோசித்தேன். நல்லவேளை இல்லை. ஒரு பழுத்த எலுமிச்சை தான் சற்று தூரத்தில் விழுந்திருந்தது. வாரத்தில் நான்கு நாட்களாவது குரங்கு பட்டாளம் வந்து விடும். வாழை மரங்களின் குருத்தையும் இளநீரையும் ஒரு கை பார்த்துவிட்டு பக்கத்து வீட்டு வேப்பமர நிழலிலோ சத்திரத்தின் உயர்நிலை தண்ணீர் தொட்டியின் கீழோ இளைப்பாறிவிட்டு செல்லும். சில சமயங்களில் வீட்டிற்குள்ளும் வந்து விடுவதுண்டு.
அடர்த்தியான எலுமிச்சை இலைகளையும் தாண்டி ஆங்காங்கே சூரியன் என்னை சுட்டுக்கொண்டிருந்தது. அதுவரை சுட்டதாக தெரியவில்லையே என்று யோசித்தபடி இருந்தேன். கன்னங்களில் கண்ணீர் காய்ந்து கறையாகி இருந்தது. ஈசிச்சேரில் இருந்து எழுந்து அதை மடித்து வைத்தேன். பாரம் குறைந்தது போல் இருந்தது. மெதுவாக குழாயடி நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அழுதது தெரியாமல் இருக்க கை, கால், முகம் கழுவிக் கொண்டு உள்ளே சென்றேன். தோட்டக்கதவை சாத்திக்கொண்டு உள்ளே வந்தேன்.
வலது புறம் கிணறும் கீழே குடியிருக்கும் வீடுகளின் நீர் பயன்பாட்டிற்கான தொட்டியும் உண்டு. இடது புறம் வரிசையாக குளியலறைகள். ஒரு காலத்தில் பட்டு நெசவுக்காக சாயமேற்ற கட்டப்பட்ட சின்ன சின்ன தொட்டிகளும், மாட்டுகொட்டகைக்கு ஏற்ப இரும்பு வளையங்களும் அங்கங்கே இருக்கும். கிணற்றில் நீர் இருந்தாலும் இறைப்பது கிடையாது. போர் போட்டு மோட்டார் வைத்து தான் கீழே உள்ள தொட்டிக்கும், மேலே இருக்கும் விடுகளின் நீர் பயன்பாட்டிற்கான மேல்தொட்டிக்கும் தண்ணீர் ஏற்றுவார்கள். மோட்டார் போடும் சுவிட்ச் எங்கள் வீட்டின் எதிரில் தான் இருக்கும்.
சில சமயம் ஐஸ் பாய் விளையாடும் போது கிணற்றுக்குள் அல்லது தொட்டிக்குள் கூட ஒளிந்து கொள்வதுண்டு. கீழே இருந்த குடித்தனங்களில் எட்டு பேர் நாங்கள் ஐஸ் பாய் விளையாடுவோம். பொடிசுகளை ஒப்புக்கு சப்பான் என்று சொல்லி கண்ணை மூடி கொள்பவரின் பின்னாலே நிறுத்தி விடுவோம். தோட்டத்தில் இருந்து உள்ளே வந்த பிறகு முகம் கழுவி ஏழு மணி வரை படிப்பது போல் இருந்து விட்டு ஐஸ் பாய் விளையாட ஆரம்பிப்போம். எட்டரை மணிக்கு செய்திகள் போடும் போது தான் சாப்பிட போவதாக விளையாட்டை நிறுத்துவோம். ஏழாவது கட்டில் இருந்து தோட்டத்தின் கதவு வரை தகரம் வேய்ந்த இரண்டு குடித்தனங்கள் தான். கொஞ்சம் இருட்டாக இருக்கும். எங்கு வேண்டுமானாலும் ஒளிந்து கொள்ளலாம். சில சமயம் தகரத்தின் மீது கூட ஏறிக்கொள்வோம்.
தகரத்தின் மீது ஏற ஏதுவாக குளியலறைகளை ஒட்டி இரண்டடி முன்னால் சிறு திண்ணையும் அதையொட்டி துளசி மாடமும் இருக்கும். தினமும் காலையில் செட்டியாரம்மா வெள்ளி விளக்கு மற்றும் வெள்ளி பூஜை சாமான்களுடன் துளசி மாடத்திற்கு வருவாள். பூஜை முடிந்து எங்கள் வீட்டு வாசலை கடக்கும் போது நெய்வேத்தியத்திற்கு கொண்டு வந்த கற்கண்டையோ, பேரீச்சம் பழத்தையோ அல்லது குல்கந்தையோ (ரோஜா இதழ், தேன், கற்கண்டு கலந்து தயாரிக்கப்படுவது - எனக்கு தெரிந்தவரை) என்னைக் கூப்பிட்டு கொடுத்து விட்டு செல்வாள்.
இன்னமும் என் மனது நந்தினி சொன்ன வார்த்தைகளையே அசைப் போட்டுக்கொண்டிருந்தது. அத்தனை எளிதாக எப்படி அவளால் சொல்லிவிட முடிந்தது என்று யோசித்து யோசித்து களைத்துப் போனேன். இருந்தாலும் நான் அவளிடம் கேட்டிருக்க கூடாதோ என்றும் மறுபுறம் தோன்றியது. ஆசை உள்ளவர்கள் யாரும் கேட்பது தானே என்று எனக்கு நானே சமாதானம் அடைய முயற்சித்தேன்.
தொலைவின் வரிகள் - 2
தொலைவின் வரிகள் -1 படிக்க இங்கே செல்லவும்
மௌனம்
நம்மிடையே நிலவும் மௌனத்திற்கு என்ன வேலை தெரியுமா? - என்னை
உன்னை பற்றியே நினைக்கச் செய்வதும் - உன்னை
என்னை பற்றியே நினைக்காதது போல் நடிக்கச் செய்வதும் தான்.
போரும் அமைதியும் (War and Peace)
கடலென ஆர்ப்பரிக்கும் வார்த்தைகளும் சரி
கண நேர மௌனமும் சரி
நம்மை நெருக்கியே வைத்திருக்கிறது
முன் எப்போதும் இல்லாதபடி.
கொலுசுச்சத்தம்
தெருவில் மழை நீர் சலசலத்து கொண்டிருந்தது
உனது கொலுசுச் சத்தம் நினைவுக்கு வந்தது
பின்னால் இருந்து என் கண்கள் மூடினாய்
கண்ணாமூச்சி ஆடத் தொடங்கியது நம் இதயங்கள்.
ஒரு விநாடி...ஒரு கேள்வி (One second...A question)
நாம் தொலைத்த விநாடிகள்
நாம் தொலைந்த விநாடிகள்
எது நமக்கு நெருக்கமாக இருக்கின்றன?
பிரபஞ்ச வெளிச்சம்
திருமலைக்கோவில் விளக்கு; குற்றால சாரல் இடி மின்னல் - பார்த்து
கண்கள் மூடி திறந்தேன் எங்கும் ஒரே இருட்டு.
மாலை நேரம் நீ தெருவில் நடந்து சென்றாய் - பார்த்து
கண்கள் மூடி திறந்தேன் எங்கும் வியாபித்திருந்தது
பிரபஞ்ச வெளிச்சமாய் உன் முகம்.
மௌனம்
நம்மிடையே நிலவும் மௌனத்திற்கு என்ன வேலை தெரியுமா? - என்னை
உன்னை பற்றியே நினைக்கச் செய்வதும் - உன்னை
என்னை பற்றியே நினைக்காதது போல் நடிக்கச் செய்வதும் தான்.
போரும் அமைதியும் (War and Peace)
கடலென ஆர்ப்பரிக்கும் வார்த்தைகளும் சரி
கண நேர மௌனமும் சரி
நம்மை நெருக்கியே வைத்திருக்கிறது
முன் எப்போதும் இல்லாதபடி.
கொலுசுச்சத்தம்
தெருவில் மழை நீர் சலசலத்து கொண்டிருந்தது
உனது கொலுசுச் சத்தம் நினைவுக்கு வந்தது
பின்னால் இருந்து என் கண்கள் மூடினாய்
கண்ணாமூச்சி ஆடத் தொடங்கியது நம் இதயங்கள்.
ஒரு விநாடி...ஒரு கேள்வி (One second...A question)
நாம் தொலைத்த விநாடிகள்
நாம் தொலைந்த விநாடிகள்
எது நமக்கு நெருக்கமாக இருக்கின்றன?
பிரபஞ்ச வெளிச்சம்
திருமலைக்கோவில் விளக்கு; குற்றால சாரல் இடி மின்னல் - பார்த்து
கண்கள் மூடி திறந்தேன் எங்கும் ஒரே இருட்டு.
மாலை நேரம் நீ தெருவில் நடந்து சென்றாய் - பார்த்து
கண்கள் மூடி திறந்தேன் எங்கும் வியாபித்திருந்தது
பிரபஞ்ச வெளிச்சமாய் உன் முகம்.
Tuesday, October 13, 2009
தொலைவின் வரிகள் - 1
நெருக்கம்
உன் மூச்சு காற்றின் வெப்பம் உணர்த்தாத நெருக்கத்தை
உன்னை பிரிந்த மறு விநாடி உணர்த்தியது.
பஞ்சு மிட்டாய்
கடல் தாண்டிய கண்டத்தில் கூட
கணப்பொழுதில் வந்து செல்கிறாய்;
காட்டன் கேண்டி பார்க்கும் போதெல்லாம்.
இலையுதிர் காலம்
இலையுதிர்ந்த மரங்களின் கீழ் நின்று உன்
நினைவுகளை அசைப்போட்டு கொண்டிருந்தேன்
காற்றில் பறந்தபடி இருந்தது ஒரு வண்ணத்துப்பூச்சி.
பயணம்
பேருந்தில் ஏறி அமர்ந்தேன் யாருமே இல்லை
உன் நினைவுகளோடு நான் மட்டும் பயணிக்கிறேன்.
நனைக்காத மழை...நினைவு குடை...
சியாட்டிலில் எட்டு மாதமும் மழை தான்
சிறிதும் நனையவில்லை நான்
செல்லும் இடமெல்லாம் உன் நினைவே குடை.
பகல் ஒளி சேமிப்பு (அட Daylight saving ba )
பகல் நேரம் அதிகமாகும் இரவு நேரம் சுருங்கிவிடும்
எனக்கு மட்டும் இரவு நீண்டு கொண்டே இருக்கிறது
எப்போதும் உன் நினைவுகளில் மூழ்கியபடி.
தொலைந்து போனாய்...சிறிது காலமாய்...
தொலைவில் நீ அங்கு
தொலைந்தேன் நான் இங்கு
உன் ஒற்றை வரியில் விழித்தேன் இன்று
என் வரிகளே சாட்சியாய் இங்கு.
உன் மூச்சு காற்றின் வெப்பம் உணர்த்தாத நெருக்கத்தை
உன்னை பிரிந்த மறு விநாடி உணர்த்தியது.
பஞ்சு மிட்டாய்
கடல் தாண்டிய கண்டத்தில் கூட
கணப்பொழுதில் வந்து செல்கிறாய்;
காட்டன் கேண்டி பார்க்கும் போதெல்லாம்.
இலையுதிர் காலம்
இலையுதிர்ந்த மரங்களின் கீழ் நின்று உன்
நினைவுகளை அசைப்போட்டு கொண்டிருந்தேன்
காற்றில் பறந்தபடி இருந்தது ஒரு வண்ணத்துப்பூச்சி.
பயணம்
பேருந்தில் ஏறி அமர்ந்தேன் யாருமே இல்லை
உன் நினைவுகளோடு நான் மட்டும் பயணிக்கிறேன்.
நனைக்காத மழை...நினைவு குடை...
சியாட்டிலில் எட்டு மாதமும் மழை தான்
சிறிதும் நனையவில்லை நான்
செல்லும் இடமெல்லாம் உன் நினைவே குடை.
பகல் ஒளி சேமிப்பு (அட Daylight saving ba )
பகல் நேரம் அதிகமாகும் இரவு நேரம் சுருங்கிவிடும்
எனக்கு மட்டும் இரவு நீண்டு கொண்டே இருக்கிறது
எப்போதும் உன் நினைவுகளில் மூழ்கியபடி.
தொலைந்து போனாய்...சிறிது காலமாய்...
தொலைவில் நீ அங்கு
தொலைந்தேன் நான் இங்கு
உன் ஒற்றை வரியில் விழித்தேன் இன்று
என் வரிகளே சாட்சியாய் இங்கு.
Subscribe to:
Posts (Atom)