Tuesday, October 13, 2009

தொலைவின் வரிகள் - 1

நெருக்கம்
உன் மூச்சு காற்றின் வெப்பம் உணர்த்தாத நெருக்கத்தை
உன்னை பிரிந்த மறு விநாடி உணர்த்தியது.

பஞ்சு மிட்டாய்
கடல் தாண்டிய கண்டத்தில் கூட
கணப்பொழுதில் வந்து செல்கிறாய்;
காட்டன் கேண்டி பார்க்கும் போதெல்லாம்.

இலையுதிர் காலம்
இலையுதிர்ந்த மரங்களின் கீழ் நின்று உன்
நினைவுகளை அசைப்போட்டு கொண்டிருந்தேன்
காற்றில் பறந்தபடி இருந்தது ஒரு வண்ணத்துப்பூச்சி.

பயணம்
பேருந்தில் ஏறி அமர்ந்தேன் யாருமே இல்லை
உன் நினைவுகளோடு நான் மட்டும் பயணிக்கிறேன்.

நனைக்காத மழை...நினைவு குடை...
சியாட்டிலில் எட்டு மாதமும் மழை தான்
சிறிதும் நனையவில்லை நான்
செல்லும் இடமெல்லாம் உன் நினைவே குடை.

பகல் ஒளி சேமிப்பு (அட Daylight saving ba )
பகல் நேரம் அதிகமாகும் இரவு நேரம் சுருங்கிவிடும்
எனக்கு மட்டும் இரவு நீண்டு கொண்டே இருக்கிறது
எப்போதும் உன் நினைவுகளில் மூழ்கியபடி.

தொலைந்து போனாய்...சிறிது காலமாய்...
தொலைவில் நீ அங்கு
தொலைந்தேன் நான் இங்கு
உன் ஒற்றை வரியில் விழித்தேன் இன்று
என் வரிகளே சாட்சியாய் இங்கு.

No comments: